தினகரன் பல்கலை கழகம் மீது அப்படி என்ன கடுப்பு?
தினகரன் பல்கலை கழகம் மீது என்ன கடுப்பு என பலர் கேட்கின்றார்கள்
கிறிஸ்தவம் என்றால் என்னவென்று தெரியுமா? தெரியாவிட்டால் படியுங்கள் என்னிடம் கேட்கமாட்டீர்கள்
அந்தரத்தில் ஆடையின்றி உயிரிவிட்டு மதத்தை தொடக்கினார் இயேசு, அவரின் சீடர்கள் கால்நடையாக நடந்து மதத்தை வளர்த்தனர்
இந்நாட்டிற்கு அன்று முறையான கப்பல் இல்லை, வந்தால் திரும்புவோமா என தெரியாது, ஆனால் உடுத்த உடையுடன் வந்து பணியாற்றினர் அந்நாளைய போதகர்கள்
அதுவும் இங்கு வந்து தமிழ்படித்து தமிழராய் வேட்டி , தமிழரில் ஒருவராக வாழ்ந்து அவர்கள் பட்ட சிரமம் கொஞ்சமல்ல,
ஆனால் இவர்களோ லண்டன்காரர்களாக மாறிகொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு இங்கு கொண்டுவந்து கொட்டினார்கள், வேலூர் மருத்துவமனை , முல்லைபெரியார் அணை போன்றவை அப்படிபட்டவை
தன் சொத்தை எல்லாம் இந்நாட்டு எளிய மக்களுக்கு கொடுத்தவர் போக, பிச்சையெடுத்து ஏழைகளுக்கு உதவியோர் உண்டு
அன்னை தெரசா போன்றோர் அவ்வகை
இல்லாதவனுக்கு உழைக்க வேண்டும், அவனை அருகிருந்து காக்க வேண்டும், அவனில் ஒருவனாக வாழவேண்டும்
அதுதான் கிறிஸ்தவம்
மாறாக எனக்கு உருக்கமாக பேசதெரிகின்றது என்பதற்காக பேசிகொண்டும், வெள்ளையன் போல டை கோட் எல்லாம் போட்டு கொண்டும் லண்டனில் சென்று கிறிஸ்தவம் பேசி காணிக்கை பிரிப்பது என்ன வகை?
லண்டனில் யாருக்கு கிறிஸ்தவம் தெரியாது?
அன்று இந்தியர்களை தேடிவந்த ஐரோப்பியர் போல இன்று ஆப்ரிக்கர்களை தேடி செல்ல இவர்கள் தயாரா? இல்லை
மாறாக கல்லூரி கட்டுவது, கட்டங்கள் கட்டுவது எல்லாம் கடவுளுக்கு ஏற்புடையதா?
அப்படி என்ன வரம்பெற்றுவிட்டார்கள் இவர்கள்? அக்கால கிறிஸ்தவ புனிதர்களை விடவா தினகரன் கும்பல் அற்புதம் செய்துவிட்டது
பீட்டர் முதல் அந்தோணியார் வரை செய்யாத புதுமைகளா?
அவர்கள் காணிக்கை வசூலித்தார்களா? கட்டடம் கட்டினார்களா?
அவர்கள் இயேசு சொன்னதை அப்படியே செய்தார்கள், இயேசு என்ன சொன்னார் ” கடவுளிடம் நீங்கள் இலவசமாக பெற்றதை மக்களுக்கு இலவசமாக கொடுங்கள்”
அப்படி பெரும் அற்புதங்களை செய்த கிறிஸ்தவ மகான்கள் எல்லாம் பராரிகளாக, பரதேசிகளாக வாழ்ந்திருக்க இந்த தினகரன் குடும்பம் ஏதோ லண்டன் லார்டு குடும்பம் போல அழிச்சாட்டியம்
ஏதோ இயேசுநாதருக்கு வழியில்லாததாது போலவும், அவருக்கு இவர்களை விட்டால் யாருமில்லாது போலவும், அவர் இவர்களிடம் மண்டியிட்டு எனக்காக உழையுங்கள் என கேட்டுகொண்டது போலவும் இம்சைகள்
ஆயிரம் சர்ச்சைகள், அழிச்சாட்டியம் உண்டென்றாலும் பால் தினகரன் அன்று சொன்ன வார்த்தைகளுக்கு கடவுளே மன்னிக்கமாட்டார்
என்ன சொன்னார்?
தினகரன் இறந்திருக்கின்றார். அவரே வங்கி ஊழியர் அது போக ஏகபட்ட சொத்துக்களை கடவுள் பெயரால் சம்பாதித்திருந்தார்கள்
ஆனாலும் பால் தினகரன் சொன்னது “என் தந்தையின் அடக்க செலவுக்கு பணமில்லையே, நான் என்ன செய்வேன்?”
எப்படிபட்ட பெரும் பொய் இது, யாராவது ஏற்றுகொள்ள முடியுமா?
ஆனால் அதற்கும் கொட்டி கொடுத்த கூட்டம் உண்டு
இந்த நபர் எப்படிபட்டவர் என நீங்களே முடிவு செய்யுங்கள். இவர்கள் வாழ்வது கிறிஸ்தவ வாழ்க்கை அல்ல
தினகரன் என்றல்ல, அன்று இங்கு மெஷினரிகள் உன்னதமான நோக்கத்தோடு உருவாக்கிய கல்விநிலையங்கள் இன்று பெரும்பாலும் சிறுபான்மை போர்வையில் ஒளிந்துகொண்டு செய்யவே கூடாத அநியாயங்களை செய்கின்றன
இது கிறிஸ்துவே வெறுக்கும் வாழ்வு
அம்மா அம்மா என சொல்லி சசிகலா கோஷ்டி சுருட்டியதற்கும், ஜீசஸ் என சொல்லி இவர்கள் சுருட்டியதற்கும் ஒரு வித்தியாசம் காண முடியாது