மன்மதன் ரதி கும்பலுக்கு வலுத்த கண்டனங்கள்
யானைக்கு கொஞ்சம் சிந்தனை உண்டு என்பார்கள், ஆனால் அந்த யானை மிகபெரும் அறிவாளியாக இருந்திருகின்றது
ஏய் பாரதி , உன் பாடல் பிற்காலத்தில் எப்படி எல்லாம் அவமானபடும் தெரியுமா? கள்ளகாதலுக்கு எல்லாம் உன் பாடலை பிண்ணணியாக போடுவார்கள்
“தாங்க முடியுமா? இந்த தமிழருக்கா பாடல் எழுதினாய், சாவு” என பாரதியாரை மிதித்து கொன்றிருக்கின்றது
யானையாவது ஒரு முறை அவரை மிதித்தது, இந்த லட்சுமி எனும் சன்னிலியோன் வகையறாவில் அவரை முகத்தில் துப்பி துப்பி மிதிக்கின்றார்கள்
இது வன்மையாக கண்டிக்கதக்கது
இல்லாவிட்டால் இனி ஷகீலா உச்ச காட்சியில் “நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி” என்ற பாடல் பிண்ணணியில் வரலாம்
சன்னி படத்தில் காதலினால் மானிடருக்கு கலவி உண்டாம் என்ற வரிகள் வரலாம்
இன்னும் பல அவமானங்கள் அவருக்கு வரலாம்
பாரதியாரின் சிலையில்தான் காகங்கள அசுத்தபடுத்துகின்றன என்றால், பாரதியாரின் பாடலும் இந்த கோட்டான்களால் அவமானமாகின்றன
தெரிந்தோ தெரியாமலோ இந்த தமிழ்சமூகத்தில் பிறந்துவிட்ட அந்த மாபெரும் சிந்தனையாளனின் புகழை இனியாவது காக்கவேண்டும்
அந்த லட்சுமி என்னும் மன்மதன் ரதி கும்பலுக்கு வலுத்த கண்டனங்கள்
“ஏய் லட்சுமி குழுவே உன்னை சிறுபுல் என உமிழ்கின்றேன்
காலடியில் வாடா உன்னை மிதிக்கின்றேன்”