ரகோத்தமன் இந்த ரைடுகளை பற்றி…

இந்திய அளவில் புகழ்பெற்றவர் ரகோத்தமன். ராஜிவ் கொலைவழக்கினை விசாரித்து மிக துல்லியமான முடிவினை கொடுத்தது அவர்தான்

அவர் கரங்கள் இன்னும் சுதந்திரமாக செயல்பட்டிருக்குமானால் ராஜிவ் கொலையில் இருந்து வைகோ, சந்திராசாமி உட்பட பலர் தப்பியிருக்க முடியாது

திமுகவே தீரா சிக்கலில் மாட்டியிருக்கும்

அப்படிபட்ட ரகோத்தமன் இந்த ரைடுகளை பற்றி மிக அழகான கருத்துக்களை சொல்லியிருக்கின்றார்

“ஜெயா சாகும்பொழுது அருகிலே இருந்தது வெங்கைய நாயுடு, பன்னீரை முதல்வராக்கும் அளவிற்கு அங்கு மிக நெருக்கமாக இருந்தவர்

பாஜக அப்பொழுது அதிமுகவோடு நெருங்கித்தான் இருந்தது, இந்த சோதனை அப்பொழுதே செய்யபட்டிருந்தால் அரசியல் சாயம் விழுந்திருக்காது”

(அப்படியும் ரகோத்தமன் ஏன் ஜெயா இருக்கும்பொழுது ரைடு செய்யபடவில்லை என கேட்காதது வேறு விஷயம்)

ஆனால் ஆணித்தரமாக அடித்து சொல்கின்றார், சசிகலா கும்பல் சர்ச்சைகுரியது, இந்த ரெய்டை ஏன் காலம் தாழ்த்தவேண்டும் என தன் கருத்துக்களை சொல்கின்றார்

ஒரு விஷயம் கவனிக்கதக்கது

மிகபெரும் பதவியிலிருந்தவரும், பெரும் சாதனையினை செய்தவருமான ரகோத்தமன் இதுவரை அரசியல் பேசவில்லை

முதல் முறையாக அரசியல் பேசியிருக்கின்றார் என்றால், அவர் அரசியலுக்கு வரலாம் என சிக்னல் தெரிகின்றது

தமிழக பாஜகவிற்கும் இப்படிபட்ட ஆட்கள்தான் தேவை, உடனே இவரை இழுத்து உள்ளே போடுவது அதற்கு நல்லது

ரகோத்தமன் அரசியல் பேசுவது தமிழிசைக்கு எப்படிபட்ட எச்சரிக்கைகளை கொடுத்திருப்பது என்பது இனிதான் தெரியும்.