சர்ச்சுக்குள் இது இந்து தேசம் என பாடவேண்டும்
ஒரு கிறிஸ்தவ கூட்டத்திற்கு செல்லவேண்டும், சென்றால் பாடவேண்டும். அவர்கள் ஆதிகால கிறிஸ்தவசபை ஆதிகாலம் என்றால் 1950கள்
அப்பொழுது உள்ள தமிழ்பாடல்கள்தான் இங்கு பாடபடுகின்றன, பெர்க்மான்ஸ் இம்சைகள் எல்லாம் இல்லை
ஒரு புத்தகத்தை கொடுத்து உங்களுக்க்கு தெரிந்த பாடலை தெரிந்துவாருங்கள் என கொடுத்தார்கள், பாடலை பாடுவது சிக்கல் அல்ல அதன் அர்த்தத்தையும் சொல்லவேண்டும்
காரணம் அங்கு தமிழ்பேசுவார்களே தவிர, ஆழபொருள் தெரிந்தவர்கள் இல்லை என்பதால் பாடலை விளக்கியும் சொல்லவேண்டும்
அதில் அழகான பாடல்கள் இருந்தன, சமஸ்கிருதம் கலந்த அக்கால தமிழ் அது , அந்தபாடல் இப்படி வந்தது
“தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்” என தொடங்கிற்று, தாசர் என்றால் அடிமை , ஏ இயேசுவின் அடிமைகளே வாருங்கள் இந்த உலகினை இயேசுக்கு கொடுப்போம் என்ற வரி அது
பாடல் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது, ஒரு வரி அடித்துபோட்டது
“இந்து தேச மாத சிரோன்மணிகளை விந்தை ஓளிக்குள் வரவழைப்போம்”
இதன் பொருள் என நோக்கினால், இந்தியாவில் உள்ள எல்லோரையும் மாதர் உட்பட கிறிஸ்தவர்கள் ஆக்குவார்களாம், அதுவும் சிரொன்மணிகளையும் மாற்றிவிடுவார்களாம்
சிரோன்மணி என்றால், தலைக்கு மேல் கிரீடமோ, அதில் வைரமோ இல்லை ரிஷிபோல கொண்டை வைத்திருப்பவர்கள் என பொருளில்வரும், அதாவது உச்ச பீடத்தையே திருப்புவோம் என்பது
அது 1900களில் எழுதபட்ட பாடலாக இருக்கலாம், எந்த சிரோன்மணியினை திருப்பினார்கள் என தெரியாது. ஒருவேளை வைகோவாக இருக்கலாம்
அது விஷயம் அல்ல
ஆனால் பாடல் எழுதியவன் அழுத்தம் திருத்தமாக எழுதியிருக்கின்றான் “இந்து தேச மாத சிரோன்மணி” என சொல்லியிருக்கின்றான்
அதாவது இது இந்து தேசம் என அவனே எழுதியிருக்கின்றான்.
அந்த பாடல் இன்றும் இந்திய கிறிஸ்தவ சபையில் பாடபடுவதாக சொல்கின்றார்கள்
ஆக சர்ச்சுக்குள் இது இந்து தேசம் என சொல்லிவிட்டுத்தான் வெளியே இது மதசார்பற்ற நாடு என குதித்துகொண்டிருக்கின்றார்கள்