குஷ்பு ஏதும் சொன்னால் அதனை திரித்து கட்டி….

குஷ்பு ஏதும் சொன்னால் அதனை திரித்து கட்டி அவர் கலாச்சாரத்தை கொச்சைபடுத்துகின்றார் என வழக்கு தொடுத்தவர்களை, குறிப்பாக இந்த திருமாவளவன் போன்ற சில‌ அல்லக்கைகளை லட்சுமி படம் வந்திருக்கும் பொழுது காணவே இல்லை

எத்தனை கலாச்சார காவலர்கள் அப்பொழுது வந்தார்கள், இந்து அமைப்புகள், தமிழ் அமைப்புகள், தாழ்த்தபட்டோரை தூக்கிவிட வந்தவர்கள் என எல்லோரும் கொதித்தார்கள்

நீதிமன்றம் இருக்குமிடமெல்லாம் அவர் மீது வழக்கு பாய்ந்தது

ஆனால் இப்பொழுது லட்சுமி என்ற தமிழரின் புதுகலாச்சாரத்தை பாரதி பாடலோடு சொன்னவர்கள் மீது ஒரு சத்தமும் இல்லை

ஏ கலாச்சார காவலர்களே, லட்சுமி கும்பலுக்கு ஒரு நியாயம், எம் தங்க தலைவிக்கு ஒரு நியாயமா? விடமாட்டோம்

மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம். அடங்க மறுப்போம் அத்து மீறுவோம்