விண்வெளி சாதனைகளை கொச்சை படுத்த வேண்டாம்
அறம் படத்தில் என்னமும் பேசட்டும், எம்.ஆர் ராதா பேசாததையா இன்னொருவன் சினிமாவில் பேசிவிடபோகின்றான்
ஆனால் ராக்கெட் தேவையில்லை என்பது போல சித்தரிப்பது கண்டிக்கதக்கது
இந்தியா ஒன்றும் பணத்தில் கொழுத்தோ அல்லது ராக்கெட் விவகாரத்தில் முண்ணணியில் நிற்கவேண்டுமென்றோ ஆசைபடவில்லை
அது ஒரு நிர்பந்தம், செய்தே ஆகவேண்டிய விஷயம்
மளிகை கடையில் கம்பியூட்டர் எப்படி வந்தாக வேண்டிய நிலையோ அப்படி காலத்தின் கட்டாயம்
செயற்கைகோள் உபயோகமும், அதனை செலுத்தும் விஷயங்களும், அதனால் பெறப்படும் ஏவுகனைகளும், செயற்கைகோளினால் கிடைக்கும் பலமுமே இன்று ஒரு நாட்டை முண்ணணியில் நிறுத்தும்
இன்று ஓரளவு இந்தியா பாதுகாப்பான நாடாகவும், நவீன உலகில் ஐடி முதல் எல்லா விஷயங்களிலும் உலகநாடுகளுக்கு சரிநிகராக ஓட முடிகின்றது என்றால் நாம் பெற்ற விண்வெளி சாதனைகளே காரணம்
இதோ வடகொரியா அணுகுண்டு வைத்திருக்கின்றது, ஆனால் செயற்கைகோள் நுட்பம் அவர்களிடம் இல்லை. அதை மட்டும் பெற்றுவிட்டால் மிக பெரும் மிரட்டலை அந்நாடு அமெரிக்காவிற்கு கொடுக்கும்
அது அச்சோதனையில் ஈடுபடும்பொழுதெல்லாம் அமெரிக்கா தடுக்கின்றது, இன்னும் வடகொரியாவால் செயற்கைகோளை விண்ணில் நிறுத்த முடியவில்லை
அதனால் ஒருவித அச்சத்திலே அது ஒவ்வொருநாளையும் எதிர்கொள்கின்றது
விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தாமல் ஒரு நாடு வளர முடியாது, பாதுகாப்பாக இருக்க முடியாது
இணையம் முதல் போன் வரை அது அன்றி இயங்காது, சுனாமியோ புயலோ சொல்லிகொள்ளாமல் வந்து கொல்லும்
அன்றாட வாழ்வில் ஒரு புள்ளியினை இயக்க முடியாத அளவு செயற்கைகோள் பணி ஆக்கிரமித்துவிட்ட காலமிது.
இந்தியா அதனைத்தான் தன் சக்திக்கும் மீறி செய்து உலக அரங்கில் தன் பிடியினை தற்காத்துகொள்கின்றது
சினிமா எடுப்பவர்கள் நாட்டில் உள்ள குறைகளை சொல்கின்றார்களாம், நல்லது
ஆழ்துளை கிணறுகளை மூடாமல் வைத்திருப்பதில் பொதுமக்கள் தவறும் இருக்கின்றதா இல்லையா? அதனை ஏன் சொல்லவில்லை
அதை சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, இத்தேசம் தன்னை தானே வருத்தி மிகுந்த சிரமபட்டு உண்டாக்கியிருக்கும் விண்வெளி சாதனைகளை கொச்சை படுத்த வேண்டாம்.