விவேக் ஜெயராமனுக்கு ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி?

Image may contain: 1 person, selfie and close-upவிவேக் ஜெயராமனுக்கு 28 வயதில் ஆயிரம் கோடி சொத்து வந்தது எப்படி? ஜாஸ் சினிமா வந்தது எப்படி என திமுகவில் பலர் துள்ளி குதித்து கேட்டுகொண்டிருகின்றார்கள்

ஆனால் இதே கேள்வி ரெட்ஜியண்ட் மூவிஸ், கிளவுட் நைன் மூவிஸ் என படம் எடுக்க கலைஞரின் பேரன்களுக்கு ஏது பணம்?

அழகிரி மகன், ஸ்டாலின் மகன், தமிழரசு மகன் எல்லாம் என்ன வேலை செய்தார்கள் என இவர்களை நோக்கி திரும்பும் என்பதை மறந்துவிடுகின்றார்கள் போல‌

நிச்சயம் இவர்களை நோக்கியும் இதே கேள்விகள் பாயும் என்பதால் அதற்கான பதில்களை தயாராக வைத்துவிட்டு இக்கேள்விகளை எழுப்புதல் நன்று

பதில் உண்டா என்றால் உண்டு, கலைஞர் பாணியிலே சொல்லலாம்

Image may contain: 1 person, smiling, selfie and close-up“திருக்குவளை முத்துவேலர் என்பவர் பராரியாக வாழ்ந்தார் , ஆனால் அவர் மகன் கருணாநிதி என்பவன் 20 வயதிலே சம்பாதிக்க தொடங்கினான்

ஒரு சவரன் நகை 100 ரூபாயாக இருந்த காலத்திலே அவன் பல லட்சம் சம்பளமாக பெற்று எழுதிகொண்டிருந்தான், வறுமையின் எல்லா பக்கத்தையும் படித்தவன் என்பதால் அவன் தகுந்த முதலீடும் செய்திருந்தான்

ஏவிம் செட்டி போல அவன் பரம்பரை பணக்காரன் இல்லை, ஆனால் ஜெமினி வாசன் போல சுயமாக முன்னேறி வந்து சொந்த படங்களை அன்றே எடுத்தவன்

பின்ன்னாளில் அவனை சோதித்த சர்காரியா கமிஷன் கூட முறையற்ற சொத்து என்றோ? வருமானவரி கட்டாத சொத்து என்றோ ஒன்றையும் காட்டிவிட முடியவில்லை

நள்ளிரவில் அவனை கைது செய்த ஜெயா கூட வருமானவரி என்றோ சொத்துகுவிப்பு என்றோ ஒரு குற்றசாட்டு அவன் மீது காட்ட முடியவில்லை

அவன் மலை மாளிகை கட்டியதாகவோ, திராட்சை தோட்டம் வாங்கியதாகவோ, கங்கை அமரனை அடித்துவிரட்டி பங்களாவினை கைபற்றினான் என்று எங்காவது செய்தி வந்ததா?

1955ல் எந்த சிறிய வீட்டை வாங்கினானோ அதே வீட்டில்தான் 60 ஆண்டுகளாக வசித்தும் வருகின்றான், அண்டை வீட்டினை கூட என்ன விலை என கேட்டதில்லை

அரசியலுக்காக குடும்பத்தையும், குடும்பத்திற்காக அரசியலையும் தூர வீசியவன் அல்ல அவன். மாறாக தன் நியாயமான வருமானங்களை தகுந்த முதலீட்டில் புகுத்தியிருந்தான்

அவற்றில் சில பன்மடங்காக திரும்பி வந்தன. 1950களில் அவன் என்ன பணம் குவித்தானோ அதனை பூட்டி வைக்காமல், ஓடும் நதியிலே விட்டு பின்பு அதே பணமதிப்புடன் திரும்ப பெற்றுகொண்டான்

சன்டிவியில் அவனது முதலீடாக இருந்து பின்பு கிடைத்த பணம் மட்டும் 100கோடி

தமிழ் சினிமா தயாரிப்பு உலகில் ஜெமினி வாசன், சின்னப்ப தேவர் போன்று தானே உழைத்து வந்த பட அதிபர்களில் ஒருவன் பூம்புகார் புரொடக்சன் கருணாநிதி என்பது வரலாற்று கல்வெட்டு

அந்த கருணாநிதியின் பேரன்கள் படம் தயாரிப்பதில் என்ன ஆச்சரியம் உடன்பிறப்பே.

அவர்கள் சினிமா தயாரிக்காவிட்டால்தான் ஆச்சரியம்.”