இரு விஷயங்களுக்கு இன்னும் தமிழில் நல்ல புத்தகங்கள் இல்லை
இரு விஷயங்களுக்கு இன்னும் தமிழில் நல்ல புத்தகங்கள் இல்லை
முதலாவது ஓட்டோமன் பேரரசு பற்றியது, இதுபற்றி Pa Raghavan போன்றோர் பத்தோடு பதினொன்றாக சொல்லியிருக்கின்றார்களே அன்றி அதன் முழு வரலாறு சொல்லபடவில்லை
உலகின் போக்கினை மாற்றி நின்ற மிகபெரும் சக்தி அது. அந்த பேரரசுதான் இன்றைய பல மாற்றங்களுக்கு காரணம்
அடுத்த விஷயம் இஸ்ரேலிய ராணுவ மேதை மோசே தயான்
நிச்சயம் அலெக்ஸாண்டர், நெப்போலியன் வரிசையில் மிக பெரும் ராணுவ மேதை அவர்
இஸ்ரேல் என்பது இன்றுவரை நீடிக்கவும், ஆரம்ப காலங்களில் அது அசாத்திய வெற்றிபெற்று தன் இருப்பை தக்க வைத்துகொள்ளவும் அவரே பிராதனம்
மிக சிறிய குழுவாக சென்று பெரும் ராணுவத்தை சமாளிப்பது எப்படி என அவர் நடத்திய யுத்தங்கள்தான் இன்றைய இஸ்ரேலுக்கு மட்டுமல்ல உலக நாட்டு ராணுவங்களையே ஆச்சரிபடுத்தும் விஷயம்
இவ்வளவிற்கும் போரில் ஒரு கண்ணை இழந்தவர்
17 நாடுகள் திரண்டுவந்து இஸ்ரேலை அடித்தபொழுததெல்லாம், தமிழகத்தின் அளவில் 10ல் ஒரு பங்கு கூட இல்லாத இஸ்ரேல் பலமுறை வெற்றிபெற இவரின் யுத்த வியூகமே காரணம்
இஸ்ரேலியருக்கு இவர் கிட்டதட்ட அவர்கள் கண்ட மெசியாவின் சாயல்
இந்த மாவீரனை பற்றி யுத்த வித்தகனை பற்றி தமிழில் இன்னும் புத்தகம் வரவில்லை
வந்தால் பெரும் வரவேற்பு பெறும் என்பதில் சந்தேகமில்லை
Pa Raghavan போன்றோர் இவரை குறித்து புத்தகம் எழுதுவது அவர்களின் எழுத்து வரலாற்றில் பெரும் மகுடமாக சூட்டபடும், அவர்கள் முயற்சி எடுக்கலாம்
இந்த மாவீரனின் ஒற்றைகண் மூடி அவரின் மாபெரும் புகழுக்கு பின் உலக பிரசித்தம் ஆனது
இட்சாக் ரபீன், ஷிமான் பெரஸ்,எகுத் ஒல்மாட், பெஞ்சமின் நேத்தய்ன்யாகு எல்லாம் ராணுவத்தினராக உளவுதுறையிராக சாதித்துவிட்டு, யுத்தங்களில் உயிர்தப்பிவிட்டு அதன் பின் இஸ்ரேலிய அரசியல்வாதி ஆனவர்கள், அந்நாடு சாதிக்கின்றது
தமிழகமோ அண்ணா முதல் ஜெயா வரை சினிமாவில் நடித்துவிட்டு வந்தவர்களால் ஆளபட்டது, பின் எப்படி உருப்படும்? நாசமாகத்தான் போகும்
அதன் தொடர்ச்சியாக இப்பொழுது ரஜினி, கமல் எல்லாம் வந்திருக்கின்றார்கள், இன்னும் வருவார்கள் தமிழகத்தை நாசமாக்குவார்கள்
தமிழகத்திலும் பலர் ஐரோப்பிய இஸ்ரேலிய பாணியினை பின்பற்றுவார்கள்
சர்ச்சியில் விக்டரி சிம்பலைத்தான் ராமசந்திரன் இரண்டு விரலை காட்டி அது இரட்டை இலையாகவும் ஆனது
தமிழக சினிமாக்களில் கூட சிலர் ஒற்றைக்கண்ணை மூடி மோசே தயான் பாணியில் வருவார்கள்
இது பல சண்டைகாட்சிகளில் உண்டு
ரஜினியும் அதே மோசேதயான் போல ஒற்றைகண்ணில் பல சண்டைகளில் சில பாடல்களில் கூட வருவார்
என்ன செய்ய? இஸ்ரேலியருக்கு வாய்த்த மோசே தயான் அப்படி, நமக்கு வாய்த்தவர்கள் இப்படி
அண்ணாமலை படத்தில் கூட ஒரு பாடலில் ரஜினி குஷ்பூவுடன் மோஷே தயான் போல வந்து ஆடிகொண்டிருந்தார்
அதற்காக அவர் மோசே தயான் ஆக முடியாது
ஆனால் குஷ்பு அந்த இஸ்ரேலிய யூத பெண்களை போலவே தெய்வீக அழகோடு இருந்தார்
விஷயம் குஷ்புவின் தெய்வீக அழகல்ல அது எல்லோருக்கும் தெரிந்தது
இந்த மோஷே தயானின் அற்புதமான வீரம் மிகுந்த யுத்த வரலாற்றை யாராவது தமிழில் எழுதி புத்தக கண்காட்சியில் வைத்தால் அது பெரும் வரவேற்பினை பெரும் என்பது உறுதி
சுவாரஸ்ய எழத்தாளர்கள் Pa Raghavan, Saravanan Chandran, Mugil Sivaபோன்றோர் முயற்சிக்கலாம்