சிறுநீரில் இருந்து யூரியா எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சிறுநீரில் இருந்து யூரியா எடுக்க வேண்டும் என சொன்ன விஷயம் செல்லூர் ராஜூ போல விமர்சிக்கபடுகின்றது

அவர் சொன்னது வியப்பல்ல, அது உலகெல்லாம் நடக்கும் விஷயமே

அதாவது மேல் நாடுகளில் வீடுகளும் அதன் அமைப்பும் திட்டமிட்டு கட்டபடுவதால் மனித கழிவுகள் இந்திய வீடுகளை போல குழிக்குள் இறங்குபவை அல்ல, மாறாக தூரமாக ஆழ்பதிந்த குழாய் மூலம் கொண்டு செல்லபட்டு அவை சில வேலைகளுக்கு பின் உரம் ஆக்கபடும்

அது விவசாயத்திற்கு பயன்படுத்தபடும், வெளிநாட்டு உரம் என இந்தியா இறக்குமதி செய்த உரங்களில் அவைகளும் அடக்கம்

அதனைத்தான் கட்காரி சொன்னார்

ஆனால் அது இந்திய யதார்த்தற்கு சரிவராது, அவர்கள் புதிதாக உருவாக்கிய குடியிருப்பில் சாத்தியம், இங்கு வீட்டுக்கு வீடு இருக்கும் மூடிய கிணற்றுக்கு அது சாத்தியமில்லை

பழங்காலம் போல மண்சட்டி சேகரம் எல்லாம் இப்பொழுது வாயப்பே இல்லா விஷயம்

ஆக இந்தியாவில் புதிதாக உருவாக்கபடும் குடியிருப்புகளில் அதனை பரிசீலிக்கலாமே தவிர உடனடியாக சாத்தியமில்லை

அமைச்சர் சொன்னது மிக சரி, ஆனால் அதற்கான உட்கட்டமைப்பு நம்மிடம் உண்டா என்றால் இல்லை.