அரசின் பிடி ஆளுநர் கையில்தான்
கமலஹாசன், முக ஸ்டாலின் என்றால் பொங்கும் அதிமுக அமைச்சர்கள் ஆளுநர் என்றால் எப்படி பொங்குவார்கள்? அவர் இவர்களை காலில் போட்டு மிதித்தாலும் கட்டி வைத்து அடித்தாலும் பாஷா ரஜினி போல ரத்தம் வழிய வழிய சிரித்துகொண்டே இருப்பார்களேயன்றி எதிர்ப்பு எல்லாம் வராது
ஏன்?
இந்த அரசின் பிடி ஆளுநர் கையில்தான் இருக்கின்றது, நன்றாக தெரிகின்றது இது உட்கட்சி சிக்கலால் பெரும்பான்மை இழந்து ஆளுநரால் மட்டுமே காப்பாற்றபட்டு கொண்டு இருக்கும் அரசு என்பது
அந்த ஆளுநரையா பகைப்பார்கள், ஒரு காலமும் நடக்காது என்பது அவருக்கு தெரியும்.
அதனால் இனி ஆளுநர் சும்மா புகுந்து விளையாடுவார் பாருங்கள்.
மீறி ஏதும் செய்தால் பெரும்பான்மை என்றோ, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றோ ஆளுநர் மிரட்ட சில நாழிகை போதும்