மத்தியில் சுயாட்சி மாநிலத்தில் கூட்டாட்சி
“ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்ணரும்” தேவையா தம்பி என கேட்ட தமிழகம் இப்பொழுது சத்தமில்லாமல் அடங்கி கிடக்கின்றது
இது உரிமை மீறல் எனும் வகையில் திமுகவும் இன்னும் குரல் கொடுக்கவில்லை
“மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்ற தத்துவம் ஓங்கி ஒலித்து மற்ற மாநிலங்களுக்கே வழிகாட்டிய தமிழகத்தில் இப்பொழுது சத்தமே இல்லை
“மத்தியில் சுயாட்சி மாநிலத்தில் கூட்டாட்சி” என்ற புது தத்துவம் எழுத கிளம்பிவிட்டார்கள்
கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் 50 வருடமாக இறுக்கி வைத்திருந்த கோட்டை கதவுகள் திறக்கபடுகின்றன
அந்த மனிதர் எழுந்தார், தமிழகம் பல உரிமைகளை பெற்றது, கோட்டையில் கொடியேற்றும் உரிமை வரை ஆளுநர் கையிலிருந்து தமிழக முதல்வர் கைக்கு வந்தது
அந்த மனிதர் சரிந்தார், எல்லாமும் சரிகின்றது
மாநில அரசு கலைக்கபட்டு ஜனாதிபதியின் ஆட்சி வந்தால் ஒழிய ஆளுநர் தலையிட வாய்ப்பே இல்லா மாநிலம் அது
ஆக இச்சம்பவம் காட்டுவது ஒன்றே ஒன்றுதான்
அறிவிக்கபடாமல் இம்மாநில அரசு கலைக்கபட்டிருக்கின்றது , வெறும் அதிகாரமற்ற அரசு பொம்மைக்கு வைக்கபட்டிருக்கின்றது.
இம்மாதிரி அவமானம் எந்த ஆட்சிக்கும் இதுவரை வந்ததில்லை என்பதுதான் விஷயம்.