நாச்சியார் பட டிரைலரிலேயே….
அப்படி ஜோதிகா அந்த டீசரில் என்ன சொல்லிவிட்டார்?
தேவனுக்கு அடியவள் மகனே என்பதை வேகமாக சொல்லிவிட்டார், ஆனால் எந்த தெய்வத்திற்கு என சொல்லவில்லை..
எல்லா தெய்வத்திற்கும் ஒவ்வொரு அடியாள் இருந்தார்கள், களவெடுக்க போகின்றவர் கூட ஒரு தேவனை வணங்கித்தான் தொழிலுக்கு சென்றதாக இலக்கியங்கள் சொல்கின்றது
அப்படி ஒரு தேவனின் அடியவள் மகள் உன் அம்மா என சொல்லி கன்னத்தில் அடிக்கும் ஜோதிகா பாத்திரம்
ஒரு நாத்திகராகவே இருக்க முடியும்.
அக்காலத்தில் சூத்திரரை எல்லாம் அவ்வார்த்தையில் இழித்து பேசும் பழக்கம் இருந்தது, அப்பொழுது பெரியார் இப்படித்தான் சொன்னார்
“அவன் என்னங்க நம்ம்மள சொல்றது, நாம சொல்வோமுங்க , ஏம்பா நீதான் கோயிலிலே இருக்க .தேவனுக்கு பணி எல்லாம் பணி செய்ற.. நீதான் உண்மையான தேவடியா பையண்ணு நாம சொல்லணும்ங்க”
ஆக நாச்சியார் பகுத்தறிவினை போதிக்கும் படம் போலிருக்கின்றது
படத்தின் பெயர் நாச்சியார், டிரைலரிலே “தே.. பயலுக” என வசனம் வேறு வருகின்றது, இவ்வளவு போதும் பற்றி எரிய.
நிச்சயம் இது சில கொந்தளிப்புகளை ஏற்படுத்தலாம். இங்குள்ள நிலவரங்கள் அப்படி
நாச்சியார் என்பது ஆண்ட வர்க்கத்து பெயர் என்பது வரலாறு சொல்வது.
இதே படத்தின் பெயரில் கமலஹாசன் எடுத்திருந்தால் இந்நேரம் வரிந்து கட்டி கிளம்புவார்கள்.
மிஸ்டர் கிருஷ்ணசாமி என்ன ஆனது உங்களுக்கு?
கமல்ஹாசன் என்றால்தான் பொங்குவீரா? வேறு யார் என்றாலும் மகா அமைதியா?
நீர் தலித் சமூக போராளியா இல்லை கமலஹாசனை மட்டும் எதிர்க்கும் போராளியா?
கிருஷ்ண்சாமி கிடக்கட்டும், பாலாவிற்கு நேரம் சரியாக இருந்தால் நாச்சியாரால் சிக்கல் இருக்காது .
பேரரிவாளனின் வாக்குமூலத்தில் அவர் ஈழம் சென்று புலிகளை சந்தித்த கதை எல்லாம் வராததே பெரிய விஷயம்
அப்படி விடுபட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு
அது திரும்ப வந்து, அவை எல்லாம் வாக்குமூலம் ஆகி, அவர் தூக்கில் ஏற்றபட்டே தீரவேண்டும் என்று பலர் விரும்புகின்றார்கள்.