பேரரிவாளன் விவகாரம்

Image may contain: 2 people, people smiling

இந்த பேரரிவாளன் விவகாரம் தொடர்பாக வரும் சில கருத்துக்கள் சரியல்ல‌

சோனியா குற்றவாளிகள் குறித்து முடிவெடுக்க முழு அதிகாரம் யார் கொடுத்தது? பின் ஏன் நீதிமன்றங்கள்?

அப்படியும் ராஜிவ் தனியாக சாகவில்லை 17 பேரோடுதான் செய்த்தார், சோனியா மட்டும் முடிவெடுக்கலாம் என்றால் மீதி 16 பேர் குடும்பத்தார் எல்லாம் பாதிக்கபடவில்லையா? அவர்களுக்கு என்ன நீதி கிடைத்தது?

இந்த அற்புதம்மாள் பேச்சும் நியாயம் இல்லாதது, ஒரு விஷயம் அவரும் மறைகின்றார் அல்லது மறைக்கபடுகின்றது.

ஒரு தாய்க்கு தன் பிள்ளை எங்கு செல்கின்றான்? யாரை பார்க்க செல்கின்றான் என தெரியாதா? அன்றே காதை பிடித்து திருகியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?

மகன் ஏதோ மகாத்மா காந்தி இயக்கத்தில் இருப்பது போல நினைத்துகொண்டு விட்டுவிட்டார், விளைவு வந்து நிற்கின்றது

அதனை எல்லாம் இந்த அம்மா மறைப்பது ஏன்?

பாதிக்கபட்டவர் சோனியா, அவரிடம் சென்று என் மகனை விடுவியுங்கள் என்பதெல்லாம் எப்படிபட்ட நியாயம்?

சோனியாவின் கணவன் கொல்லபட்டது போலவே சில பெண்களின் கணவர்கள், சில பிள்ளைகள், எல்லாம் கொல்லப்ட்ட கொடூரம் அது, அவர்களிடம் எல்லாம் இந்த அம்மா ஒரு வார்த்தை மன்னிப்பு கோரினாரா?

இவ்வளவு காலம் ஆகின்றது, ஒரு நாளாவது என் மகனை சிக்கவைத்தது புலிகள் என்றோ, திராவிட இயக்கத்தின் தொடர்பாலே என் மகன் நாசமானான் என சொல்ல இவருக்கு மனம் வருகின்றதா?

சுத்தமாக இல்லை, ஆனால் அனுதாபம் மட்டும் தேடுகின்றார்

உணர்ச்சிக்கு இடம் கொடுத்து அறிவை வெளியிலிட்டவர்கள் இவரை ஆதரிக்கின்றனர்

உலகபுகழ்பெற்ற ஜாக்கிசானின் மகன் போதைபொருள் வழக்கில் சிக்கியபொழுது, என் மகனை நல்ல குடிமகனாக வளர்க்க தவறியதற்கு சீனமக்கள் என்னை மன்னிக்கவேண்டும் என மனம் உருகி சொன்ன ஜாக்கிசானிடம் இருந்து அற்புதம்மாள் கற்றுகொள்ள வேண்டும்

பேரரிவாளன் செய்தது தவறு, அவன் சிறுவயதிலே வழிமாறி செல்ல இவர் அனுமதித்ததும் பெரும் தவறு

தன் சொந்த்நாட்டு ராணுவத்தை தன் மகன் சாத்தானின் படைகள் என புத்தகம் தயாரிக்க துணை போனதையும், கடல் கடந்து அந்நியநாட்டு தீவிரவாத கூட்டத்தை சந்திக்க சென்றதையும் கண்டிக்க தவறிய அற்புதம்மாள் இன்று பேச என்ன உரிமை இருக்கின்றது?

அப்படி பேசும் முன் நடந்த சம்பவத்திற்கும், தன் கவனகுறைவுக்கும் வருத்தம் தெரிவிக்க வேண்டாமா?

ஏதோ காவல்துறை அதிகாரி செய்தது தவறாம், ஆனால் பேரரிவாளன் புலிகளோடு தொடர்பில் இருந்தது தவறே இல்லையாம்

என்ன கொடுமை இது?

பேரரிவாளனும், நளினியும் அங்கிள் சைமன் போன்றோர் பின்னால் திரியும் நபர்களுக்கு எச்சரிக்கைகள்

அற்புதம்மாள் அந்த தும்பிகளின் தாய்தந்தையருக்கு பெரும் எச்சரிக்கை என்பது மட்டும் உண்மை

தும்பிகளின் பெற்றோர் அற்புதம்மாளை பார்த்தாவது தும்பிகளை திருத்துவது நல்லது, திருத்த முடியாவிட்டால் தலைமுழுவது சாலசிறந்தது.