துபாய் பாலா உலகின் சக்திமிக்க டான்
தாவுத் இப்ராகிம் என்பவர் சத்தியமாக துபாயில்தான் இருக்கின்றார், 100% உறுதியாயிற்று. ஆனால் பாலா எனும் பெயரில் முகமறைவாக இருக்கின்றார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றியிருப்பார் போலிருக்கின்றது
இல்லாவிட்டால் இவ்வளவு போன்களும், செய்திகளும் சர்வதேச காவலர்களிடம் இருந்து வராது
“நான் யார் தெரியுமா? பாலா யார் தெரியுமா? அவர் தொடர்பு தெரியுமா? நான் உளவுதுறையில் எப்படிபட்டவன் தெரியுமா? உன் தெருவுக்கு அடுத்த தெருதான் எனக்கு சேவ் ஹவுஸ். எத்தனைபேரை மலேசியாவில் தூக்கியிருக்கின்றோம் தெரியுமா?” என ஏகபட்ட மிரட்டல்கள்
துபாய் பாலா உலகின் சக்திமிக்க டான் என்பது அவர்கள் சொல்லவரும் விஷயம்
“அண்ணே நினைச்சா வள்ளியூரையே அழிச்சிருவாரு, ஊரும் இருக்காது பொத்தையும் இருக்காது பாக்குர்ர்ர்ரியா …” என சொல்கின்றது ஒரு உளறல் குரல்
அய்யா அங்கே இப்பொழுதுதான் தெப்பகுளம் எல்லாம் அழகுபடுத்தியிருக்கின்றார்கள், தெப்ப திருவிழா வேறு வரும் வேண்டாம் என்றால் அது உன் கையில்தான் இருக்கின்றது, அண்ணனை பற்றி பேசினால் வள்ளியூர் அழியும் , காப்பாத்திக்க என்கின்றது
வள்ளியூரை இனி நான் மட்டும்தான் காப்பாற்ற முடியுமாம்
நானே இனி பாலாவினை அழைத்து, துபாயா என் பிரதர் மார்க் வா இருக்காரா? என பேசி மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடிவிட வேண்டுமாம், இல்லாவிட்டால் வள்ளியூர் பகுதியே சாம்பலாகிவிடுமாம்
ஏலேய் லூசு,
சும்மா சர்வதேச போலிஸ், உளவுதுறை என அருகில் 2 கிளாஸ் சரக்கிற்காக பேசுபவனிடம் போனை கொடுக்காதே
சும்மா நீ மருந்தை குடித்துவிடுவேன் என மிரட்ட அது வள்ளியூர் காவல் நிலையம் கிடையாது, அது துபாய்
பிய்த்து எறிந்துவிடுவாகள், கொஞ்சம் கவனமாக இரு.
வள்ளியூர் பக்கம் மட்டும் வந்துவிடாதே, குளத்து மடையில் சிக்கலாம், உன்னை வைத்து அடைத்துவிட கூடும்.