ஜிம்பாப்வேவில் நடப்பதுதான் என்ன?

வெள்ளையன் சில தெற்கு ஆப்ரிக்க நாடுகளை வளமாக மாற்றி வைத்திருந்தான் அதில் ஒன்று ஜிம்பாப்வே

நீண்ட காலத்திற்கு பின் 1980ல் அது சுதந்திரம் பெற்றது. அது சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே நாசமானது. நாசம் என்றால் மகா நாசம்

பணமதிப்பு எல்லாம் வீழ்ந்து படுபாதாளத்திற்கு சென்றது

ஒரு மில்லியன் கரன்சிக்கு நோட்டு என்றளவு சீரழிந்தது

அதற்கு ஒரே காரணம் அதன் இரண்டாம் அதிபர். இன்றுவரை அவர்தான் அதிபர் அவர் பெயர் முகாபே

சுதந்திரம் கிடைத்த நாடுகள், நல்ல தலைவன் கிடைக்காவிட்டால் நாசமாகிவிடும், ஜிம்பாபே அதற்கு சாட்சி

அந்த முகாபேக்கு வயது 93, நாடு நாசமான நிலையிலும் தன் மனைவியினை அடுத்த அதிபராக நியமிக்கும் முயற்சியில் இறங்கினார்

பொறுத்து பார்த்த ராணுவம் பொங்கிற்று, மனிதர் இப்போது வீட்டு சிறையில் இருக்கின்றார்

93 வயதிலும் தன் அதிகாரத்தை விட்டுவிட கூடாது என போராடிகொண்டிருக்கும் மனிதருக்கு ஆதரவாக பாழாகிவிட்ட நாட்டில் ஒருவரும் இல்லை