திருமுருகன் காந்தியின் இயக்கத்தை…

இந்த திருமுருகன் காந்தியின் இயக்கத்தை யாரோ சதிசெய்து உடைத்து உமர் நைன் என்பவரை உருவாக்கிவிட்டார்களாம்

இப்படியும் சில செய்திகள் வருகின்றன‌

குழப்பம் விளைவிக்கும், பிரிவினை வாதம் பேசும் எல்லா அமைப்பு எங்கிருந்து வரும்? இவர்கள் ஐ.நா வரைக்கும் சென்று பேச செலவழிப்பது யார்? இன்னபிற செலவுகளை கவனித்துகொள்வது யார் என இறங்கினால் தெரியும்

ஆக இதெல்லாம் யாராலோ உருவாக்கபடுபவை.

நோக்கம் தெரிந்த சிலர் வெளியேறலாம், 
அவர்களுக்கு துரோகிபட்டம் கொடுத்து அடித்து பெயரை கெடுப்பதெல்லாம் அந்த இயக்கத்து பாணி

என்னவோ அது சேகுவேரா இயக்கம் போலவும் அதில் பிடல் காஸ்ரோ என்பவரை விட்டு சே பிரிந்தது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்கள்

குழப்பம் விளைவிக்க தொடங்கபட்ட இயக்கத்தில் குழப்பம் வரத்தான் செய்யும்

லாட்டரி சீட்டு மார்ட்டினின் மகன் உப தலைவரான இயக்கத்தில் இப்படி நடக்காவிட்டால்தான் ஆச்சரியம்

இன்னும் அந்த உமர்நைன் கேள்விகளுக்கு திருமுருகன் பதிலளிக்கவில்லை ஆனால் அவரின் அடிப்பொடிகள் என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருக்கின்றன‌