புத்த மதத்திற்கு முன் இந்துமதம் இருந்ததா?

புத்த மதத்திற்கு முன் இந்துமதம் இருந்ததா? நிரூபிக்க முடியுமா என பலர் சவால் விடுகின்றார்களாம்

இதனை எழுத தொடங்கினால் அது மிகபெரும் பாகமாக வரும், அவ்வளவு விஷயம் இருக்கின்றது என்பதால் மிக சுருக்கமாக சொல்லிவிடலாம்

வேதகாலம் என்பது இக்காலம் என கணிக்கமுடியா அளவு பழமையானது அன்றே தோன்றிவிட்டது இந்துமதம். அதன் வீச்சு அரேபியா முதல் சீனா வரை பரவியிருந்தது

6 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட பிள்ளையார் சிலைகள் பாகிஸ்தான் பகுதியில் கண்டெடுக்கபட்ட விஷயம் உண்டு, சிந்துசமவெளி ஆராய்ச்சியில் சிவன் சாயலில் கிடைத்த பொருட்கள் உண்டு

அலெக்ஸாண்டர் இந்தியா பக்கம் வருவதற்கு சில நூறு ஆண்டுக்கு முன்பே புத்தர் பிறந்திருந்தாலும் , அவன் வரும்பொழுது புத்தமதம் ஆட்சியில் இல்லை, இந்து மன்னர்கள் இருந்ததையே அவன் வரலாறு சொல்கின்றது

அசோகர் காலத்தில் புத்தம்தம் அரியணை ஏறியபின் அது வீறுகொண்டு பரவியது, கிட்டதட்ட ரோம அரசன் கிறிஸ்துவத்தை ஏற்றுகொண்டபின் கிறிஸ்தவம் வேகமாக பரவிய சாயல் அது

இன்னும் ஆழமாக சொல்லவேண்டும் என்றால் இமயமலையே இந்துமதத்தின் தாய்வீடு, அகத்தியர் கூட அங்கிருந்துதான் தென்னகம் வந்தார் என்கின்றது வரலாறு

அகத்தியரின் உருவத்தை காணுங்கள், அது நிச்சயம் திபெத்திய சீன உருவமே சந்தேகம் இல்லை

இன்றும் மங்கோலியாவில் முருகன் சாயலில் உள்ள தெய்வத்தின் சுவடுகள் உண்டு, ஆக முருகன் வழிபாடு அன்றே தொடங்கி இருக்கின்றது, முருகன் வடகிருந்துதான் பழனிக்கு வந்தார் என்பதும் கவனிக்க வேண்டியது

ஆக புத்தரின் காலத்திற்கு முன் இங்கு இந்துமதம் இருந்தது என்பது ஏராளமான சான்றுகளில் நிரூபிக்கலாம்

மிக ஆதாரமான சான்று, புத்தர் இந்துமதத்தின் சில விஷயங்களை எதிர்த்தே கிளம்பினார், அதில் ஒன்று உயிர்களை பலிகொடுத்தல்

புத்தர் எங்கு பிறந்தார்? நேபாளத்தில் பிறந்தார். உலகின் ஒரே இந்துநாடு என்ற பெருமையிலும், இதுவரை யாருக்கும் அடிமை ஆகாத நாடாக இருந்த பெருமையும் நேபாளத்திற்கு உண்டு

புத்தர் நேபாளத்தில் தன் கருத்துக்களை பரப்பமுடியவில்லை, ஆனால் ஆசியா எங்கும் பரப்ப முடிந்தது. அதனால் மற்ற நாடுகள் புத்தமதத்தை தழுவின

திபெத் முழுக்க புத்தமயம் ஆனாலும் நேபாளம் அதனை போராடி காத்துகொண்டது, அது இன்றுவரை நீடிக்கின்றது

இலங்கையில் விஜயன் என்பவன் கப்பலில் சென்று இறங்கும்பொழுது அவனுக்கு மதம் இல்லை, ஆனால் பின்னர் அசோகர் காலத்திலேதான் அங்கு மதம் பரப்பபட்டது

சில விஷயங்கள் இன்னும் ஆழமாக நோக்க வேண்டியது உண்டு

தாய்லாந்தில் புத்தமதம் இன்று உண்டு, ஆனால் புத்தர் எப்படி காட்சியளிக்கின்றார்

பிரம்மன் என்பவர் 4 முக புத்தராகவும், திருமால் என்பவர் படுத்திருக்கும் புத்தராகவும் மாற்றபட்டு அப்படியே காட்டபடுகின்றார்கள்

ஏன் இந்த மாற்றம்?

தமிழக கத்தோலிக்க ஆலயங்களை பாருங்கள், அவற்றின் வழிபாட்டுமுறை அதாவது சொரூங்களுக்கு மாலை சூடுதல், கோவிலில் கொடிமரம் வைத்தல், கொடி ஏற்றுதல், தேர் இழுத்தல் எல்லாம் என்ன வகை? ஐரோப்பா சொல்லி கொடுத்ததா? நிச்சயம் இல்லை

தமிழர் மரபில் எங்கள் தெய்வங்களை கொண்டாடுங்கள் என்பதே

தாய்லாந்திலும் அதுதான் நடந்து திருமாலும், பிரம்மனும் புத்தராக மாற்றாப்ட்டார்கள்

இப்படி ஏராளமான சான்றுகளை காட்ட முடியும்

ஒரு மதம் இன்னொரு மதத்தின் கோவிலை தன் மத கோவிலாக மாற்றி கொள்வது எக்காலமும் நடந்த விஷயம்

உதாரணம் மாமன்னன் சாலமோன் கட்டிய ஆலயத்தில் நெபுகாத் நேச்சர் எனும் பாபிலோனிய மன்னன் தன் தெய்வத்தை நிறுத்த முயன்றதும், அது முடியாமல் அவன் பாரசீகம் திரும்பியதும், அதன் பின் அலெக்ஸாண்டர் தளபதி வம்ச அந்தியோக் என்பவன் தன்னை அந்த ஆலயத்திற்கு நானே கடவுள் என சொல்ல வந்ததும் வரலாற்று பக்கம்

அதாவது ஆள்வன் சொன்னதே தெய்வம் என்ற காலங்கள் அவை

அப்படி திருப்பதி ஆலயம் புத்தமத ஆலயமாக மாறி பின்னாளில் மறுபடியும் இந்து ஆலயமாக மாறி இருக்கலாம்

ஒருவிஷயம் கவனிக்க வேண்டும், இந்து மதம் என்பது ஆரோக்கியத்தை வளர்க்கும் மதம். அந்த மதத்தை சரிவர பின்பற்றினால் உடல்பயிற்சியே தேவை இல்லை

அதனால்தான் இந்துக்கள் பெரும்பாலும் மலை மீதே ஆலயம் அமைத்தார்கள், மக்கள் ஏறி சென்று இறங்கினால் உடலும் மனமும் நல்ல அமைதி பெறும். அந்த தத்துவமே அது

மலைகளின் மீது ஆலயம் அமைப்பது சாட்சாத் இந்துக்கள் அடையாளம், அப்படி மலைமேல் இருக்கும் திருப்பதி இந்துக்களால் அமைக்கபட்டு பின் புத்தமதத்தால் பிடிபட்டு பின் இந்துமதத்திற்கு வந்திருக்கலாம்

விஷயம் ஒன்றுதான்

உலகில் யார் தோற்றுவித்தார், எப்படி வந்தது? என தெரியாத ஒரே மதம் இந்துமதம், அது அவ்வளவு பழமையானது

யாரும் தன்னுடைய ஒரு அடையாளத்திற்கு பெயர் சூட்டிகொள்ள முடியாது, இன்னொருவர்தான் பெயர் வைக்க முடியும், அப்படி இங்கு தானே பிறந்து வளர்ந்து உருவான மதம் வாழ்ந்த பகுதி இந்துகுஷ் மலைக்கும் இண்டஸ் நதிக்கும் அருகில் இருந்ததால் அது இந்து மதம் என்றே அறியபட்டது

புத்தம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் என எத்தனை சவால்களை கண்டாலும், பலமுறை விரட்டபட்டாலும் அது தன்னை புத்துயிர்கொண்டு புதுப்பித்து வளர்ந்து நிற்கின்றது

இந்த பகுத்தறிவு சர்ச்சைகள் எல்லாம் கிட்டதட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னால் கிளம்பிய பூதங்கள், அதற்கு பல காரணங்கள். இந்துமதத்தில் ஊடுருவிய சில சக்திகளும் அதற்கு துணைபோயின‌

ஆக பல்லாயிரம் ஆண்டு தொன்மையான விஷயத்தை, எத்தனையோ இடர்பாடுகளை தாண்டி வந்து நிலைத்து நிற்கும் மதத்தை வெறும் 100 ஆண்டுகளான பகுத்தறிவு கொண்டு அறுத்து பார்ப்போம் , வென்று பார்ப்போம் என சொல்வீர்களாயின்

எப்படி புத்தமு, சமணமும், இஸ்லாமும், கிறிஸ்தவமும் அம்மதத்தை விழுங்கிவிட எண்ணி தோற்றதோ, அப்படி இந்த பகுத்தறிவும் தோற்றே போகும்

அதனை காலம் உங்களுக்கு விரைவில் காட்டும். என்ன விரைவில் காட்டும்? கண்முன் காட்டிகொண்டே இருக்கின்றது