அப்படி என்ன சொல்லி விட்டார் வைரமுத்து?
அப்படி என்ன சொல்லி விட்டார் வைரமுத்து?
முற்றிய நெல் குனிந்து நிற்கும் என மோடியினை பற்றியும், நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தாற் போல் என நிர்மலா சீத்தாராமன் பற்றியும் சொல்லிவிட்டார்.
அவர் கலைஞர் அபிமானி என்பதால் மத்திய அரசைபற்றி கவி புனையகூடாதா என்ன?
“கவிதைக்கு பொய் அழகு” என என்றோ சொல்லிவிட்டவர்தான் அவர், பின்னும் ஏன் அதனையே சீரியசாக பேசிகொண்டிருக்கின்றார்கள்?
கவிஞர்கள் தொழிலே அக்காலத்திலிருந்து இப்படி பொய்யாக பாடுவதுதானே? இதில் என்ன குறை கண்டார்கள்?
மிசாவில் இந்திராவினை “சேலை கட்டிய ஹிட்லர்” என சொன்ன கலைஞர் , பின்பு ” நேருவின் மகளே வருக” என கவிதை பாடலாமாம், ஆனால் அவரின் சீடர் வைரமுத்து பாட கூடாதாம்
ஸ்டாலினும், கனிமொழியும் மோடியின் திருகரம் பிடித்து இல்லம் அழைத்து செல்லலாமாம், தயாளு அம்மாள் வரவேற்கலாமாம்
ஆனால் வைரமுத்து பேசிவிட கூடாதாம், என்னய்யா திமுக நியாயம் இது?