ஜோதி நிர்மலா என்றொரு கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்பு ஜோதி நிர்மலா என்றொரு கலெக்டர் இருந்தார், 2003ம் ஆண்டுகள் வாக்கில் இருந்தார்
வைகுண்டராஜனின் முறைகேடான மணல் கொள்ளையினை முடக்கி அவர் ஆலைக்கே சீல் வைத்த முதல் நபர் அவர்தான்
கன்னியாகுமரியில் அவர் இருக்கும் வரை ஒரு ஸ்பூன் மண் அள்ளமுடியாமல் மணல் கும்பல் தவித்தது
தென்னகை கடற்கரை எல்லாம் வைகுண்டராஜனின் அரசாங்கம், அவரின்றி அலையும் அடிக்காது என மிகுந்த இறுக்கமான காலங்களில் மிகதுணிச்சலான அதிரடிகாட்டியவர் அந்த ஜோதி நிர்மலா
அதன் பின் சில சர்ச்சைகள் வர, ஜெயாடிவியின் பங்குதாரர் என பகிரங்கமாக வைகுண்டராஜனை சொன்ன ஜெயா சும்மா இருப்பாரா? கலெக்டர் தூக்கி எறியபட்டார்
இன்று எங்கிருக்கின்றார் என்றே தெரியவில்லை.
அந்த ஜோதி நிர்மலா எனும் கலெக்டரின் பாத்திரம்தான், அறம் படத்து நயன் தாரா.
ஆனால் இதனை பற்றி எல்லாம் யாராவது பேசுவார்களா என்றால் இல்லை , பேசவே மாட்டார்கள்
காரணம் எதனை பேசவேண்டும், எதனை பேசகூடாது என ஊடகங்களுக்குள்ளே ஒரு ரகசிய இழை ஓடுகின்றது, அதற்கு கட்டளைகள் எங்கிருந்தோ பிறப்பிக்கபடுகின்றன
அறம் படம் முழுக்க தென்னக மக்களுக்கு கண்களுக்குள் வருவது அந்த கலெக்டர் ஜோதி நிர்மலாவே.
அதனை ஊடகங்களால் மறைக்க முடியுமா?
(அவரது மிக நேர்மையான பணியினை விருது கொடுத்து கவுரவித்தவர் கலைஞர்..)