என்னய்யா பத்மாவதி சிக்கல்?

என்னய்யா பத்மாவதி சிக்கல்?

அதே கதையினை சித்தூர் ராணி பத்மினி என என்றோ படமாக எடுத்துவிட்ட தமிழகம் இது

வட இந்தியரால் இப்பொழுது கூட‌ முடியவில்லை

திராவிட பூமி என்றால் சாதாரணம் அல்ல. இங்கு ஏற்பட்டிருக்கும் புரட்சி அப்படி.


கோவை என்றால் விஞ்ஞானி ஜி.டி நாயுடு போன்றவர்கள், பெரும் தொழிலதிபர்கள் எல்லாம் இனி நினைவுக்கு வர கூடாதாம்

ஜக்கி சாமி என்பவர்தான் நினைவுக்கு வரவேண்டுமாம்

இந்தியா பக்கம் வந்துவிட்டு திரும்பிய அலெக்ஸாண்டர் இது சாமியார் தேசம் என எழுதி வைத்தானாம்

அந்த பாரம்பரிய பெயரினை மிக கஷ்டபட்டு திரும்ப உருவாக்குகின்றார்கள்

ஆனாலும் கோயம்புத்தூருக்கு இப்படி ஒரு அவமானம் வந்திருக்க கூடாது

கோவை வாசிகளே கொஞ்சம் உஷாராக இருங்கள், இல்லாவிட்டால் ஒரு நள்ளிரவில் அது ஜக்கிபுதூராக பெயர்மாற்றம் பெற்றுவிடலாம்


மோடியை நோக்கி விரல் நீட்டினால் வெட்டப்படும் : பீகார் பா.ஜ.க. தலைவர்

இடித்தல், கொல்லுதல், கொளுத்துதல், வெட்டுதல் தவிர ஏதும் தெரியாத கட்சி போலிருக்கின்றது

ஆனாலும் பீகார் தலைவருக்கு, தமிழக பாஜக தலைவர் எவ்வளவு பரவாயில்லை?, இப்படி எல்லாம் பேசவா செய்கின்றார்?

இனியாவது தமிழகம் அக்கா தமிழிசையின் பெருமையினை புரிந்துகொள்ளட்டும்.