இன்று உலக மீணவர் தினம்

Image may contain: 9 people, people smiling, people standing

இன்று உலக மீணவர் தினம், உலகெல்லாம் கொண்டாடுகின்றார்கள்

தமிழகத்தில் தமிழிசை தலமையில் ஆரம்பித்துவிட்டார்கள். சமீப காலமாக அக்கா அமைதியாகிவிட்டார் என நினைத்தால் அக்கா மீணவர் நாளை எப்படி கொண்டாடுவது என்ற திட்டத்தில் இருந்திருக்கின்றார் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

அக்கா இன்று காலை தன் அடிப்பொடிகளுடன் மெரினா சென்றுவிட்டார், ஒரு திருக்கை மீனை அவர் எடுத்துகொள்ள அவரின் அடிப்பொடிகள் ஆளாளுக்கு ஒன்றை எடுத்து போஸ் கொடுத்தார்கள்

தன் திரு கையில் திருக்கை மீனோடு நின்றார் தாமரை இருக்கை தலைவி.

(பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரனுக்கு துணை தலைவர் பதவி கொடுப்பதாக செய்தி, ஆனால் அன்னார் மீன் பிடிக்க எல்லாம் வரவில்லை, சைவம் போல)

பின் அக்கா தலமையில் எல்லா மீன்களும் வகையாக சமைக்கபட்டு அங்கு வந்த எல்லோருக்கும் இலவசமாக வழங்கபட்டதாம்

ஜெயா சமாதி, எம்ஜிஆர் சமாதிக்கு ஊட்டினார்களா என்பது பற்றி தகவல் இல்லை

இப்படியாக வங்க கடலே அதிரும் வண்ணம் மீணவர் திருவிழாவினை கொண்டாடியிருக்கின்றது தமிழக பாஜக‌

(இனி பொங்கல் என்றால் வயலோரம் பொங்கல் தருவார்கள், நெசவுவாளிகள் நாள் என்றால் புடவை தருவார்கள் என எதிர்பார்த்துகொள்வோம்)

மீன் உணவா? அதுவும் இலவசமாகவா? ச்ச்சே இப்பொழுது பார்த்து அங்கு இல்லாமல் போய்விட்டோமே என்ற பெரு வருத்தம் வருகின்றது

வரட்டும்

ஆனாலும் தமிழிசை அக்கா, இது மீணவர் நாள் அல்லவா? சென்னையில் சீன படகு போராட்டம், ராமேஸ்வர கடல் சிக்கல்கள், கூடன்குள அணுவுலை பகுதி என தமிழக மீணவர்கள் படாதபாடு பட, அவர்களுக்கு என்ன செய்துவிட்டீர்கள்? அதை செய்துவிட்டு அல்லவா இப்படி கொண்டாட வரவேண்டும் என் கேட்கலாம்

ஆனால் அக்கா மிக எச்சரிக்கையாகத்தான் திருக்கை மீனோடு நிற்கின்றார்

ஆம், திருக்கை வாலினால் கொடுக்கபடும் அடி வலி மிகுந்தது. அடிக்க மிக தோதுவான சாட்டை அதுதான்

மீணவர் சிக்கல் தொடர்பாக‌ யாராவது கேட்பார்கள் என தமிழிசைக்கு தெரியாதா? கேட்டால் என் கையில் திருக்கை வால் இருக்கின்றது என சிம்பாலிக்காக சொல்கின்றார் அக்கா

இனி யாராவது மீணவர் பிரச்சினை பற்றி கேட்பார்கள்???