பத்மாவதி என்பது நடந்த கதை
பத்மாவதி என்பது நடந்த கதை, ஒரு வரலாற்று சம்பவம். அதனை அடிப்படையாக கொண்டு ஏகபட்ட திரைபடங்களும், புத்தகங்களும் வந்தாயிற்று
இப்பொழுது குதியோ குதி என குதிக்கின்றார்கள், எப்படியும் குதிக்கட்டும் நடந்த வரலாற்றை மறக்கடிக்கவா முடியும்?
இதற்காக தீபிகா படுகோனேவினை கொல்வோம் என்பதும், தலைவெட்டுவோம் என்பதும் என்ன மாதிரி தேசம்?
அந்த தீபிகாவின் அழகினை கூட ரசிக்க தெரியாத காட்டுமிராண்டி தேசம் ஆகிவிட்டதா? கொல்லவேண்டிய நபரா அவர்? அட பதர்களா?
ஒருவன் நாக்கை வெட்டுவேன் என்கின்றான், ஒருவன் தலையினை வெட்டுவேன் என்கின்றான், அவனவன் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிகொண்டிருக்கின்றான்
அரசாங்கமும் கவனித்துகொண்டே இருக்கின்றது, ஆனால் சத்தமே இல்லை
படம் வெளிவந்து அதில் ஆட்சேபகரமான கருத்து இருந்தால் கண்டிக்கலாம், படமே வரகூடாது என்றால் எப்படி?
மிக மிக மோசமான நிலமைக்கு நாடு சென்றுகொண்டிருக்கின்றது, இம்மாதிரி நபர்களை விட்டுவைப்பது நாட்டுக்கு நல்லதல்ல
பெரியார் அன்றே சொன்னார்
“இந்த நாட்டை இந்தியா பாகிஸ்தான் என பிரிக்காதீர்கள், வட இந்தியா தென் இந்தியா என கலாச்சார அடிப்படையில் பிரியுங்கள்
அவர்கள் வேறுமாதிரி, தென்னகம் வேறுமாதிரி, இணைந்து வாழ்வதில் ஏராளமான சிக்கல் வரும், கடப்பது சிரமம்”
குஷ்பு அளவிற்கு இல்லாவிட்டாலும் திபிகா பரவாயில்லை,
அந்த தீபிகா படுகோனேவினை கூட ரசிக்கமுடியாத இந்த கும்பல், ரசனை கெட்ட காட்டுமிராண்டி கும்பல் இத்தேசத்தை சுடுகாடு ஆக்கும் ஆபத்து நிரம்ப உண்டு