தினகரனுக்கும் பழனிச்சாமி கோஷ்டிக்கும் போட்டி…

தமிழகத்தில் சத்தமில்லாமல் ஒரு போட்டி நடக்கின்றது, அது தினகரனுக்கும் பழனிச்சாமி கோஷ்டிக்கும் ஆனது

ராமசந்திரனுக்கு நூற்றாண்டு விழா என பழனிச்சாமி போகும் இடத்திற்கெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தினகரன் கோஷ்டி முந்தி சென்று பலம் காட்டிவிட்டு வருகின்றது

இம்முறை தூத்துகுடியில் பலம் காட்டுகின்றார்கள் , பழனிச்சாமிக்கு முன்பு எப்படி செல்லலாம் என யோசித்த தினகரனுக்கு வஉசி நினைவுக்கு வந்தார், உடனே சென்று கூட்டம் கூட்டி தினகரன் பலத்த அழிச்சாட்டியம்

நேற்று பழனிச்சாமி சென்றிருக்கின்றார்

இவர்கள் இருவரும் தனிதனியாக செல்வதில் யாருக்கு மகிழ்ச்சி என்றால் அதிமுக ஊழியர்களுக்கு

ஒரு கூட்டத்திற்கு இவ்வளவு பணம் என இரு இடத்திலும் வாங்கலாம் அல்லவா? அப்படி அந்த ஊழியர்களுக்கு இரட்டை சம்பளம் என்கிறது ரகசிய செய்திகள்.

சசிகலாவிற்கு ஏன் இவ்வளவு பணம்? சேகர் ரெட்டியிடம் இருப்பது பன்னீர் பணமா? இன்னும் மணல் குவாரிகள் எதற்காக என்றேல்லாம் ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும் பதில் ஒன்றுதான்

சசிகலா ஒன்றும் சவுதி அரேபிய சுல்தானை விட அதிகம் சம்பாதிக்க குவிக்கவில்லை, விவேக் ஒன்றும் பில்கேட்ஸை எட்டிபிடிக்க குவிக்கவில்லை

மாறாக தமிழ்நாட்டில் ஒரு சுற்று சுற்றிவரவே அவர்களுக்கு பல நூறு கோடிகள் தேவை, அதற்கும் மேல் தேர்தல் வந்தால் சில ஆயிரம் கோடிகள் தேவை

தமிழக மக்களின் டிமாண்ட் அப்படி இருக்கின்றது.

ஆக சசிகலாவோ, விவேக்கோ குவிக்கும் பணமெல்லாம் எங்கும் போகாது, இங்கேதான் சுற்றும்

சொல்லியாயிற்று, இனி தினகரன் செல்லுமிடமெல்லாம் இந்த பாடல் வரி ஒலிக்கும், சும்மாவே அவர் மக்கள் செல்வனாம், இனி இந்த வரி ஒலிக்காமல் எப்படி?

“மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான்”


அரசியலுக்கு வர அவசியமான நேரம் இன்னும் வரவில்லை : ரஜினி

அதான் தலைவா , இப்படியே நேரம் வரவில்லை வரவில்லை என சொல்லி கண்ணம்மா பேட்டைக்கு போகும் நேரம் வரும் வரை கடத்திவிட முடியாதா என்ன?