அந்த செய்தி ஒன்றும் வியப்பல்ல‌

 தீபிகா படுகோனேவினை கொல்வோம், மோடியினை எதிர்த்தால் கொல்வோம் என பல மிரட்டல் குரல்கள் கேட்ட நிலையில் ஒரு விசாரணை கமிஷன் நீதிபதி உயிரை விட்டிருக்கின்றார்இன்னும் யார் யார் எல்லாம் சாகபோகின்றார்களோ தெரியாது

ஆக புதிய இந்தியா பல பேரின் ரத்தத்தில் , இன்னும் பெரு ரத்தம் குடிக்க‌ பிறந்துகொண்டிருக்கின்றது.


அந்த செய்தி ஒன்றும் வியப்பல்ல‌

முன்பு திருப்பூரில் ஒரு கூட்டம் நடந்தது, அதில் கலைஞரும் முக.ஸ்டாலினும் பங்குபெற்றார்கள். ஸ்டாலின் பேசும்பொழுது “திருப்பூரில் பிறந்த குமரன்” என முழங்கினார்

கலைஞர் பக்கத்தில் இருந்தவரிடம் கிசுகிசுக்க, அவர் அலறியடித்து பேசிகொண்டிருந்த ஸ்டாலினிடம் செய்தி சுமந்து ஓடினார்

கலைஞர் சொல்லி அனுப்பிய செய்தி என்ன?

“யோவ், குமரன் திருப்பூரில் பிறக்கலய்யா, அவன் பிறந்தது சென்னிமலையில்”

அந்த அளவு பேச்சிலும் , எழுத்திலும் மிக கவனமாக இருந்தார் கலைஞர்.

ஸ்டாலின் அப்பொழுது இருந்தே அப்படித்தான்