ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்தது : செய்தி

Image may contain: 2 people, people standing

“இரட்டை இலையினை ஏன் தந்திருக்கோம்ணு உங்களுக்கு தெரியும் பழனிச்சாமி, ஏதும் ஆட்டம் காட்ட நினைச்சீங்க அவ்வளவுதான், கவர்ணர பற்றி தெரியும்ல‌

அட எசமான், நீங்க கண்ணால சொல்றத தலையால் செய்வோமுங்க, அடிமை விசுவாசத்திற்கு உதாரணம் எங்கள விட்டா உலகத்தில யார் இருக்கா? இப்போ என்ன, தாமரை தமிழகத்தில மலரணும் அவ்வளவுதான? சிறப்பா மலர வச்சிரலாம்”


ஓபிஎஸ் – ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை கிடைத்தது : செய்தி

இரட்டையர்களுக்கு இரட்டை இலை கொடுத்துவிட்டதன் அர்த்தம் விரைவில் ஆர்.கே நகர் முதல் உள்ளாட்சி தேர்தல் வரை நடைபெறும்

அதனை விட எழுதபடா ஒப்பந்தம் 50% தொகுதிகளில் பாஜகவினை இந்த இரட்டையர் குழு வெற்றிபெற வைக்க வேண்டும்

நிச்சயம் சசிகலா கும்பலுக்கு பெரும் அதிர்ச்சி. ஜெயாவும் சென்றார், இரட்டை இலையும் அவர்களை விட்டு சென்றது என்பது பேரதிர்ச்சி

அந்த சின்னத்தை அப்படியே முடக்கியிருந்தால் நல்லது, தமிழகம் உருப்பட வாய்ப்பு உண்டு, அனால் தமிழகம் உருப்படவே கூடாது என்பதில் டெல்லிக்கு எந்நாளும் அக்கறை உண்டல்லவா? அதுதான் நடந்திருக்கின்றது.

இனி தமிழ்நாட்டு புது புரட்சிதலைவி யார்?

தமிழிசைதான்