இன்றைய செய்திகளில் இரு செய்திகள் மனதை பாதித்த ரகம்
இன்றைய செய்திகளில் இரு செய்திகள் மனதை பாதித்த ரகம், முதலாவது சத்யபாமா பல்கலைகழக மாணவி தற்கொலை செய்தி. ஏதோ ஆசிரியரால் அவமானமாம் அதனால் செத்துவிட்டாராம்
இன்றுள்ள தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் இது, ஏதோ ஒரு அவமானம் நடந்துவிட்டால் உடனே வாழ்வினை முடித்துவிடுகின்றார்கள்
யார் அவமானபடவில்லை, நாமெல்லாம் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி முடிந்து பணிக்கு வந்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் நடகும் சம்பவத்திற்கு ஆயிரம் முறை தொங்கவேண்டும்
இன்றுள்ள தலைமுறைக்கு வழிகாட்ட ஆளில்லை அல்லது அவமானங்களை தாண்டி வந்த கலைஞர் போன்றோரின் வெற்றி செய்திகளை படிப்பதில்லை
கலைஞரின் வாழ்வு சொல்கின்றது, பள்ளியிலே அவருக்கு படிப்பு ஏறவில்லை என அவமானபடுத்தி வெளியேற்றுகின்றார்கள், அவர் இன்று தொடா உயரமா?
கலைஞர், எடிசன் போன்றோர் எல்லாம் படித்து சாதித்தார்களா?
தமிழக முதல்வர்களில் இன்றுவரை அண்ணா தவிர யாரும் பள்ளிகூடம் தாண்டியவர்கள் இல்லை,
இன்றுள்ள தலைமுறைக்கு மகா அவசியம் அவமானபட்டு வென்றோர் வரலாறுகளை படிப்பது, மன்ம் பாதித்து நொந்து இருக்கும் போது சில பெரியவர்களின் அனுபவமான வார்த்தைகள்
ஒரு அனுபவஸ்தர் எடுத்து சொல்லியிருந்தால் அவர் மனம் மாறியிருக்கலாம், இப்படி விபரீத முடிவு எடுத்திருக்கமாட்டார்
படிப்பு மட்டுமல்ல, மனப்பயிற்சியும் மகா முக்கியம்
இரண்டாம் விஷயம் ஒரு சினிமா தயாரிப்பாளரை பற்றியது, ராமசந்திரன் என்பது அவரின் பெயர். அப்படி சொன்னால் தெரியாது ஆனால் இப்படி சொன்னால் புரியும்
அவர்தான் நாம் அனுதினமும் பார்த்து ரசிக்கும் வின்னர் படத்து தயாரிப்பாளர்
அந்த படம் இன்றுவரை எல்லோரையும் சிரிக்க வைக்கின்றது, ஆனால் தயாரிப்பாளர் நிலை என்ன?
அந்தபடம் பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகரித்தால் வட்டி கொடுமைக்கு ஆளாகி எல்லா ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டிருக்கின்றார்
அது படத்தின் லாபத்தையும் விழுங்கி அவரின் சொத்தையும் விழுங்கி அவரை தெருவில் நிறுத்தியிருக்கின்றது
மனிதர் சர்வர் வேலை எல்லாம் செய்து வாழ்ந்திருக்கின்றார், இப்பொழுது நிலமை பிள்ளைகளால் பரவாயில்லையாம்
கந்துவட்டியினால் ஒவ்வொருவரு தயாரிப்பாளராக வந்து சொல்ல சொல்ல மனம் கலங்குகின்றது
ஆனால் கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் நடிகரும், இயக்குநரும் கொஞ்சமும் அவர்கலை கண்டுகொள்ளாமல் கடந்திருக்கின்றார்கள் எனும்பொழுது சினிமா உலகின் இன்னொரு பக்கமும் புரிகின்றது
உலகிலே மிக மிக நன்றிகெட்ட துறை, அரசியலுக்கு பின் அதுவாகத்தான் இருக்கும் போல
இப்படி எல்லாம் சிந்தனை செல்லும்பொழுது டிவியினை அழுத்தினால் குஷ்பு படம் ஓடுகின்றது
அந்த படத்தில் குஷ்பு அழுகின்றார், உடனே நமக்கு ரத்தம் எல்லாம் கொதிக்கின்றது, அதுவும் குஷ்புவின் கண்ணீரை கண்டால் சங்கத்தார் கண்களில் ரத்தம் வழிகின்றது
நடிப்பு என்றாலும் அந்த மகாலட்சுமியினை அழவைப்பதை எப்படி பொறுக்க முடியும்? பின் அந்த தயாரிப்பாளர் என்ன ஆனால் என்ன?
அதுவும் இப்போதைய படங்களில் குஷ்புவினை இந்த திரையுலகம் அனுமதிப்பதிமில்லை, பின் எப்படி அந்த திரையுலகம் உருப்படும்?
இப்படி அன்புசெழியன் போன்றோரின் கைகளில் சிக்கி படாதபாடுதான்படும், சங்கத்து சாபம் சும்மா விடாது.