பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று மறைமுகமாக குஜராத் மாநில சர்ச் தெரிவித்தது
பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று மறைமுகமாக குஜராத் மாநில சர்ச் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது என்ன சர்ச்சை இதனை விட பயங்கரமான சர்ச்சைகள் எல்லாம் தென்மாவட்டதில் வந்தன
அதாவது அப்பொழுது திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி இருந்தது, அப்பாவு என்பவர் சுயேட்சை வேட்பாளராக நிறுத்தபட்டார், தேர்தல் வியூகங்கள் வகுக்கபட்டன
திருச்செந்தூர் கோவில் பக்கம் விபூதியும் நெற்றியுமாக அப்பாவு சிரித்துகொண்டிருந்தபொழுது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளில் பங்கு தந்தைகள் இப்படி நோட்டீஸ் அடித்துகொண்டிருந்தனர்
அப்பாவு நம்மவர், நமது மதத்துக்காரர் அவருக்கு வாக்களிக்க வேண்டியது கிறிஸ்தவர் கடமை
இதனை பார்த்தபொழுது என்ன சொல்வது என்றே தெரியவில்லை, இந்த கூத்துக்கள் எல்லாம் முன்பு நடந்தன
இந்துக்கள் இந்துகட்சிக்கு வோட்டளிக்கவேண்டும் என சொன்னால் மதவாதமாம், ஆனால் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவருக்கு வாக்களிக்க வேண்டும் என சொன்னால் அது சமதர்மமாம்
இப்பொழுது குஜராத்திலும் அதே இம்சை என்கின்றார்கள்
யார் வம்பிற்கும் போகாமல் , அடுத்த மதத்தை சாடாமல் மிரட்டாமல் தான் உண்டு தன் ஆலயம் உண்டு என வாழும் கிறிஸ்தவர்கள் யாருக்கும் பாஜக் ஆட்சியில் சிக்கல் இருப்பதாக தெரியவில்லை.
கிறிஸ்தவர் வழிபட, கொண்டாட என்ன சிக்கல் வந்துவிட்டது, சொல்லுங்கள் என்றால் ஒருவருக்கும் சொல்ல தெரியவில்லை.
மாறாக வட இந்தியா நிலை உனக்கு தெரியாது என்கின்றார்கள், வட இந்தியாவில் வெள்ளையன் காலம் முதல் காங்கிரஸ் ஆட்சி காலம் வரை அப்படித்தான்.
அதனை எல்லாம் மறைத்துவிட்டு பாஜகவினை மட்டும் ஏன் பெரிதாக சொல்கின்றார்கள் என்பதும் தெரியவில்லை
கோவிலை மூடு என்றார்களா?, திருப்பலி நடக்க கூடாது என்றார்களா? திருவிழாக்கள் நடக்க கூடாது என்கின்றார்களா? ஒன்றுமே இல்லை
மாறாக கத்தும் கிறிஸ்தவன் யாரென நோக்கினால், கல்வி நிலையம் நடத்துபவனும், சிறுபான்மை எனும் போர்வையில் தாங்கள் அனுபவிக்கும் சலுகைகளில் பங்கம் வருமோ என அஞ்சுபவனே கத்திகொண்டிருக்கின்றான்
ஆழ நோக்கினால் அதுதான் புரிகின்றது
இயேசு வாழ்ந்த காலத்தில் தனக்கென பெரும் கூட்டத்தினை வைத்திருந்தார், அவர் சொன்னால் எதனையும் செய்ய அக்கூட்டம் தயாராக இருந்தது
அன்றைய இஸ்ரேல் ரோமருக்கு அடிமையாய் இருந்தது, பலர் இயேசுவினை போராளியாக்க முயன்றார்கள், ரோமானியருக்கு எதிராக கலகம் செய்ய தூண்டினார்கள்
இயேசு அப்படி எல்லாம் செய்யவில்லை, ஆள்வோருக்கு அடங்கிதான் நடந்தார். ஒரு யூதன் கடவுளை தவிர யாருக்கும் அடிமை இல்லை என்ற கொள்கை இருந்தபோதும் ரோமருக்கு வரிகட்டி நடக்க அவர் தயங்கவில்லை
அரசு வேறு, கடவுளுக்கான மத வாழ்க்கை வேறு என்பதில் தெளிவாக இருந்தார்
அவரின் சீடர்களும் பின்னாளில் அப்படியே இருந்தனர்.
இன்று இவர்களோ நாட்டிற்கும் மதத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பிதற்றிகொண்டிருக்கின்றனர்
உண்மையில் கிறிஸ்தவர்களை இன்று தூண்டிவிட்டுகொண்டிருப்பது பிரிவினை கிறிஸ்தவ கோஷ்டிகள், சிறுபான்மை போர்வையில் பிழைப்பினை செய்துகொண்டிருக்கும் கோஷ்டிகள்
தங்கள் பிழைப்பு கெட்டுவிடும் என்ற அச்சத்தில் அவை உளறிகொண்டிருக்கின்றதே அன்றி வேறல்ல, நல்ல கிறிஸ்தவர்கள் இவர்களிடம் மகா எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இயேசு சொன்ன ஓநாய்கள் இவர்கள்தான்