இரட்டை இலை வாங்கியிருப்பது பழனிச்சாமி கோஷ்டி?
இரட்டை இலை வாங்கியிருப்பது பழனிச்சாமி கோஷ்டி, அது அதிமுக கோஷ்டி, அதிமுகவில் நடந்த கோஷ்டி சண்டையில் இப்பொழுது கோப்பையினை தூக்கி கொண்டு ஓடியிருக்கின்றது பழனிச்சாமி கோஷ்டி
இது நியாயமில்லை என தினகரனும் சசிகலாவும் கத்தலாம், திவாகரனும் பன்னீர்செல்வமும் அடித்துகொள்ளலாம், அவர்கள் கட்சி அவர்கள் உரிமை
ஆனால் இது நியாயமா இல்லையா என அடித்துகொண்டிருப்பது யார் தெரியுமா?
திருநாவுக்கரசரும், தமிழிசையும்
இவர்கள் இருவருக்கும் என்ன வந்தது என்பதுதான் ஆச்சரியம்
இரட்டை இலை கிடைத்ததில் மகிழ்சி என குதிக்கின்றார் தமிழிசை, இவருக்கு ஏன் மகிழ்ச்சி?
இது துரோகம் என கத்துகின்றார் திருநாவுகரசர்? இவருக்கு ஏன் சோகம்
முன்பு இவர் அதிமுகவில் இருந்தபொழுது இப்படி இரட்டை இலை முடக்கபட்டது, அப்பொழுது ஜெயா அணியில் இருந்தார் இந்த திருநாவுக்கரசர்
ஜாணகியும் ஆர்.எம் வீரப்பனும் கண்ணீர் விட்டு வெளியேறியபொழுது இது நியாயத்தின் வெற்றி என கொக்கரித்தவர் இதே திருநாவுக்கரசர்
பின் அதே திருநாவுக்கரசர் சசிகலாவால் ஓடவிட்டு அடிக்கபட்டது வேறு விஷயம்
மனிதர் இப்பொழுது அதே நினைப்பில் பேசிகொண்டிருக்கின்றார், தான் இப்பொழுது தமிழக காங்கிரஸ் தலைவர் என்பதே மறந்துவிட்டது
இவரை வைத்துகொண்டு என்ன செய்யபோகின்றார்களோ காங்கிரசார், நிச்சயம் உருப்படாது
இவர் ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக, “என்ன சின்னபிள்ளைதனமா இருக்கு..” என டிவிட் செய்து களமிறங்கிவிட்டார் தமிழிசை
இரட்டை இலை விவகாரத்தில் சம்பந்தமே இல்லாத இருவர் அடித்துகொண்டிருப்பதை கண்டால் ஆச்சரியமாக இருக்கின்றது.