தென்னகம் திராவிட பூமி என்பது அட்டகாசமாய் தெரியும் நேரம்
அந்த சர்சையினை ஓரளவு எல்லோரும் அறிந்திருக்கலாம், அதாகபட்டது கேரள இந்துமாணவி ஒருவர் இஸ்லாம் ஒருவரை திருமணம் செய்து இஸ்லாமாக மாறினார், அகிலா எனும் பெயரை ஹிதாயா என மாற்றியும் கொண்டார்
விடுவார்களா மதவாதிகள்? கேரளா பற்றி எரிந்தது. இது லவ் ஜிகாத் என்றும், அப்பெண்ணை தீவிரவாதியாக மாற்றபோகின்றார்கள் என்றெல்லாம் பிரச்சினைகள் வலுத்தன, கேரள மதராசா அடித்து நொறுக்கபடும் அளவு சென்றது
அப்பெண்ணிற்கு பலத்த அச்சுறுத்தலும் இருந்தது, எனினும் அப்பெண் சேலத்த்திற்கு வந்தபின் சற்று ஆறுதல் என்றாலும் சர்ச்சை குறையவில்லை
இந்த திருமணம் செல்லாது என அறிவிக்க போரி உச்சநீதிமன்றம் வரை சென்றுவிட்டார்கள், இந்தியாவின் முதல் லவ் ஜிகாத் வழக்கு இதுதான்
உச்சநீதிமன்றத்திற்கு அப்பெண் செல்லவேண்டும், அங்குதான் சிக்கல் முளைத்தது
புதிய இந்தியா பிறந்திருக்கின்றது அல்லவா?, பத்மாவதி படத்திற்கே அந்த நிலை என்றால் இந்த ஹாதியா அவர்கள் கையில் கிடைத்தால் என்னாகும்?
டெல்லி செல்லுமுன் ரயிலோடு கொளுத்திவிடுவார்களா இல்லையா?
எல்லோருக்கும் பெரு அச்சம் ஏற்பட்ட நேரமிது
இங்குதான் திமுக மகளிரணியின் பிரமுகரான Rajathi Salma அனைத்து பெண்கள் சார்பாக கேரள முதல்வருக்கு பிரச்சினையின் வீரியம் குறித்து கடிதம் எழுதினார், அதனை ஏற்றுகொண்ட கேரள அரசு ஹதியாவிற்கு தகுந்த பாதுகாப்பும், விமான போக்குவரத்தும் அளிக்க முன்வந்தது
இதுதான் திமுகவின் முத்திரை, மதங்களை தாண்டி மதவெறியினை தாண்டி மனிதநேயத்திற்காக அந்த பெண்ணுக்கு, அவள் உரிமைக்கு குரல்கொடுக்க அங்கும் தைரியமிக்க பெண்கள் இருக்கின்றார்கள்
பெரியாரின் வழிவந்த திராவிட முன்னேற்ற கழகம் பெண்ணுரிமை காப்பது என்பதும், அந்த கலைஞர் உருவாக்கியவர்களும், அவர் கண்டெடுத்த உறுப்பினர்களும் என்றும் கொள்கை திடம் கொண்டவர்கள் என்பதும் மறுபடியும் நிரூபணம் ஆகியிருக்கின்றது
தமிழ்பெண் ஒருவர் அனைத்து பெண்கள் சார்பாக மனுகொடுத்தவுடன் ஏற்றுகொண்டு நடவடிக்கை எடுத்து மதவாத சக்திகள் மீது கரிபூசிய பிரணாய் விஜயன் வாழ்த்துகுரியவர்
தென்னகம் திராவிட பூமி என்பது அட்டகாசமாய் தெரியும் நேரம்
கலைஞர் நலமாக இருந்திருந்தால் சல்மாவின் செயலுக்கு பெரும் பாராட்டு தெரிவித்திருப்பார் என்பது நிச்சயம்.
திராவிட கொள்கைகள் வழி நின்று, கழகத்திற்கு பெருமை சேர்த்த சகோதரி Rajathi Salma அவர்களுக்கு வாழ்த்துக்கள்
(ஏம்மா Devi Somasundaram இதெல்லாம் உனக்கு தெரியுமா? தெரியாதா?, தெரிந்தால் சும்மா இருக்கும் ரகம் அல்ல நீ..)