அன்புசெழியன் கிடைத்துவிட்டார்….
வழக்கமாக ஏதாவது ஒரு காரணத்திற்காக இருபிரிவாக மோதிகொள்ளு திரையுலகத்தில் இப்பொழுது அன்புசெழியன் கிடைத்துவிட்டார்
அவர் தண்டிக்கபட வேண்டியவர் என்றொரு குழுவும், அவர் மானிட தெய்வம் என்றொரு கும்பலும் கிளம்பியிருக்கின்றது
அந்த கும்பல் விரைவில் அன்புசெழியனுக்கு பாராட்டு விழா எல்லாம் நடத்துவார்கள் போலிருக்கின்றது
“ஆரியபடை கடந்த நெடுஞ்செழியனின் வாரிசு அன்புசெழியன்” என கவியரங்கம் நடத்தபடும் நாள் தொலைவில் இல்லை
ஏம்பா சினிமாக்காரங்களா
அரசியல்வாதி கதை, கள்ள காதல் கதை, டான் கதை , வீரப்பன் கதை ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை கதை வரை படமாக எடுப்பீர்களே?
எந்த சம்பவம் நடந்தாலும் அதன் சூடு ஆறுவதற்குள் படமாக எடுத்து சம்பாதிப்பீர்களே? உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டோம் என பேட்டி எல்லாம் கொடுப்பீர்களே?
இந்த அன்புசெழியன் கதையினை சினிமாவாக எடுத்தால் என்ன?
சாதரண சம்பவத்திற்கு பட்டிமன்றம், பேட்டி, புலனாய்வு, குற்றம் நடந்தது என்ன? என கிளம்பும் டிவிக்காரர்களையும் இந்த அன்புசெழியன் விவகாரத்தில் காணவில்லை
ஏதாவது ஒரு டிவி அவரால் பாதிக்கபட்டவர்களிடம் பேட்டி எடுக்குமா என்றால் இல்லை. பாண்டேவினை , கோபிநாத்தினை, கார்த்திகை செல்வனை எல்லாம் அன்புசெழியன் விவகாரத்தில் காணவே இல்லை.
இளவரசன் எப்படி செத்தான், கவுசல்யாவின் கணவன் எப்படி கொல்லபட்டான் என கிளம்பிய மனித உரிமை அமைப்புகளும் இப்பொழுது சைலண்ட் மோட்.
கள்ளகாதல் கதைகளை பஞ்சாயத்து பண்ணும் நாட்டாமைகள், உங்களுக்கு முழுபாதுகாப்பு தருகின்றோம் என சொல்லும் நாட்டாமைகளில் ஒருவரும் அன்புசெழியன் விவகாரத்தில் சத்தமே இல்லை
இதே ஒரு அப்பாவி கிடைத்துவிட்டால் ஆளாளுக்கு பிடித்து பிழிவார்கள்..