ஏன் இந்த ஈழ ஆதரவாளர்கள் மேல் ஒரு கோபம்?

உங்களுக்கு ஏன் இந்த ஈழ ஆதரவாளர்கள் மேல் ஒரு கோபம்? அவர்களை ஏன் சாடுகின்றீர்கள்? என பலர் கேட்டுகொண்டே இருக்கின்றனர்

அவர்களுக்கு சொல்வது ஒன்றுதான்

அதோ ஈழத்தில் மாவீரர்கள் கல்லறை என ஒரு பெரும் மைதானத்தை காட்டுகின்றார்கள் அல்லவா?, அப்படி இங்கேயும் அமைக்க வேண்டும் என ஆசைபட்டவர்கள்தான் இவர்கள்

புலிகளுக்கு ஆயுதபலம் இருந்தது ஆனால் ஆள்பலம் இல்லை, யாழ்பாணத்தோரோ ஐரோப்பாவிற்கு ஓடிகொண்டிருந்தனர், ஓரளவு கிழக்கு மாகாண போராளிகள் மட்டும் தாக்குபிடித்தனர்

கிட்டதட்ட 15 லட்சம் மக்கள் தொகை உள்ள ஈழத்தில் புலிகள் உறுப்பினர் எண்ணிக்கை வெறும் 5 ஆயிரத்திற்கும் உள்ளேதான்

இங்கேதான் புலிகளின் விஷ மூளை தமிழகத்திலிருந்து இளைஞர்களை கொண்டு செல்ல திட்டமிட்டது, அதற்கு சிலர் பலியாகியும் இருந்தனர். 1990களில் பலர் அப்படி சென்றுவந்து இங்கும் சில கொள்ளைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்

அவ்வளவு ஏன் சிறையில் இருக்கும் பேரரிவாளனும் சென்றுவந்தவன், ராஜிவ் கொலையினை படம் எடுத்து செத்த ஹரிபாபு காரியம் முடிந்ததும் அங்கு தப்ப திட்டமிட்டவன்

ஆனால் ராஜிவ் கொலைக்கு பின் அவர்கள் திட்டம் நிறைவேறவில்லை, ஆனால் 2002க்கு பின் திட்டமிட்டனர்

இங்கிருக்கும் இளைஞர்கள் சென்று அங்கு ஆயுதம் ஏந்தவேண்டும் என பகிரங்கமாக பேசியவர் பழ.நெடுமாறன்

எப்படியோ யுத்தம் முடித்துவைக்கபட்டதால் இந்த முத்துகுமார் போன்ற சிலரின் மரணத்தோடு தமிழக மாவீரர் பட்டியல் முடிந்தது,

உண்மையினை சொல்லவேண்டும் என்றால் தமிழகத்தில் மாவீரர் மயானங்கள் அமைவதை உயிரை கொடுத்து காத்த தலைவன் ராஜிவ் காந்தி, அவர் இங்கு சாகாவிட்டால் நினைத்துபார்க்க முடியாத பயங்கரங்கள் நடந்திருக்கும்

எப்படியோ அந்த ஆபத்து கடந்துவிட்டது, சைமன் போன்றவர்கள் இன்று வியாபாரத்துக்கு கத்துகின்றனரே தவிர அந்த பெரும் ஆபத்து நீங்கிற்று

இந்த மாவீரர் தினம் என சிலர் சொல்லிகொண்டிருப்பான்

சிவகுமாரன் முதல் பத்மநாபா , குட்டிமணி, தங்கதுரை, சபாரத்தினம என ஏராளமான போராளிகள் உண்டு, அவர்களை பற்றி எல்லாம் இவர்கள் நினைக்கமாட்டார்கள், மாறாக பிரபாகரன் சொல்லி அவருக்காக யாரெல்லாம் செத்தார்களோ அவர்கள் எல்லாம் மாவீரர்கள்

இந்த மாவீரர்களில் இந்திய ராணுவத்தோடு சண்டையிட்டவர்களும் உண்டு

அந்த அமைதிபடை காலத்தில் பெரும் வினோதம் நடந்தது, இந்திய ராணுவம் அங்கே புலிகளுடன் சண்டையிட்ட‌ புலிகள் இந்தியாவின் மதுரையில் சிகிச்சை பெற்ற கொடுமை எல்லாம் நடந்தது

பின் அவர்களும் மாவீரர் ஆக்கபட்டார்கள்

ஆக சொந்த நாட்டு ராணுவத்தை கொன்றவர்களைத்தான் இவர்கள் மாவீரர்கள் என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் சொல்லட்டும்.

ஆனால் இப்படி எத்தனையோ ஆயிரம் மாவீரர்களை உருவாக்கிய பிரபாகரனுக்கு யாராவது அஞ்சலி செலுத்துவார்களா என்றால் இல்லை

அவருக்கு அல்லவா முதலில் செலுத்தவேண்டும்? ஆனால் செய்யமாட்டார்கள் ஏன்?

ஈழ பிசினஸ் அதில்தான் ஓளிந்திருக்கின்றது.

ஒரு விஷயம் ஒப்புகொள்ளவேண்டும், புலிகளின் தலமைதான் சரியில்லைய்யே தவிர அந்த உறுப்பினர்கள் அர்பணிப்பும் உண்மையான தியாகிகளுமாக இருந்தார்கள்

செத்து செத்து நாடு அடைவதாக நம்பி செத்துகொண்டே இருந்தார்கள்

எந்த நாட்டிலும் இல்லாத போராளிகள் அங்குதான் உருவானார்கள், ஆனால் பிடிவாதமும் யார் சொல்லியும் எதுவும் கேட்கமாட்டேன் என அடம்பிடித்த தலைவனால் எல்லாம் வீணாய் போனது

அதுதான் பெரும் வருத்தமான வரலாற்று சோகம்.

போராளி குழுக்கள் காலத்தில் ஒரு பேச்சுவார்த்தை தொடர்பாக கிழக்கு மாகாண இஸ்லாமிய தலைவர் ஒருவர் போராளிகளால் துப்பாக்கி காட்டி மிரட்டபட்டார், அப்பொழுது அவர் சொன்னார்

“தம்பி, உங்களுக்கு மட்டும்தான் துப்பாக்கி கிடைக்குமா? நாங்கள் கை காட்டினால் எத்தனை நாடுகளும் இயக்கமும் எங்களுக்கு ஆயுதம் தர தயாராக இருக்கின்றார்கள் தெரியுமா? ஆனால் நாங்கள் ஏந்தமாட்டோம், காரணம் இதன் அழிவு மிக பயங்கரமாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும்”

அதுதான் முதிர்ச்சி, அதுதான் தெளிவு. அதனை கொண்டிருந்தவர்கள் அழிவினை தவிர்த்தார்கள்

அது இல்லாதவர்களால் அத்தனை ஆயிரம் கல்லறைகள் வந்தன, அவர்களின் சாவுகளும் வீணாயின.