“திரையுலக சடையப்பன்” அன்புச்செழியன்
இன்னும் கைது ஆகாத அந்த அன்புசெழியன் அநேகமாக லண்டனில் விஜய் மல்லையாவிற்கு அடுத்த வீட்டில் இருப்பார் போலிருக்கின்றது.
தமிழக சினிமா பிரபலங்கள் ஐரோப்பாவில் இனி அடிக்கடி சூட்டிங் வைத்தால் விஷயம் உறுதி
யார் மீது எல்லாமோ சர்ச்சை வரும் திரைதுறை அது, ஆனால் அப்பொழுது எல்லோரும் கம்மென்று இருப்பார்கள். சக நடிகர், நடிகை, தொழிலாளி என்றெல்லாம் அங்கு யாரும் பார்ப்பதில்லை, எவன் செத்தால் என்ன? என இருந்துவிடுவார்கள்
ஆனால் அன்புசெழியனுக்கு ஓடி வந்து “நன்னடத்தை சான்றிதழை” பக்கம் பக்கமாக வாசிக்கின்றார்கள்
பணம் பத்தும் செய்யும், இவர்களிடம் பதினொன்றும் செய்யும் போலிருக்கின்றது
இப்படி விழுந்து விழுந்து தனக்கு நன்னடத்தை சான்றிதழை வழங்கும் இவர்களுக்கு அன்புசெழியன் என்ன கைமாறு செய்யபோகின்றார்?
கொஞ்சமாவது வட்டியினை குறைத்து கைமாறு செய்யமாட்டாரா என்ன?
வட்டி குறைப்பு செய்தால் “வட்டி தள்ளிய வள்ளல்” என பட்டம் கொடுத்து கொண்டாடவும், அவர் கடனை குறைத்தால் “மொத்தமும் கொடுத்த இரண்டாம் சீதக்காதி” எனவும் கொண்டாட இவர்கள் தயார்.
இப்போது “திரையுலக சடையப்பன்” என்னும் பட்டம் அவசரமாக தயாராகிகொண்டிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புசெழியன் போன்றவர்கள் இல்லையென்றால் சினிமா எடுக்க முடியாது – சீமான்
யாரிடமெல்லாம் பணம் கொட்டி கிடக்கின்றதோ அவர்களின்றி எதுவும் இயங்காது என்பது அன்னாரின் கொள்கை, அந்த கொள்கைக்கு முரண்பட்டாமல் அன்னார் பேசியிருக்கின்றார்
தற்போதைய தமிழக திரை பிரபலங்களின் ஓப்புதல் வாக்குமூலப்படி , “கலைத்தாயின் ஒரே தவபுதல்வன் ” இவர்தான்
இவர் இல்லாவிட்டால் “கலைத்தாய்” செத்துவிடுவாளாம்