எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தீர்களா?
சும்மாவே இந்திய பொருளாதாரம் என்னால் நாசமாக போயிற்று என சொல்லிகொண்டிருக்கின்றார்கள், இந்த நேரம் பார்த்து இந்த இவாங்கா வேறு வந்திருகின்றது
இனி இங்குள்ள நிலவரத்தை பார்த்து உலகெல்லாம் சொல்லுமே இந்த புள்ள,
எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தீர்களா?”
முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிராகாம் லிங்கன் விறகு விற்கும் வேலைதான் செய்தார் பின்னாளில்தான் அதிபர் ஆனார்
ரஷ்ய இரும்புமனிதன் ஸ்டாலின் சிறுவயதில் செருப்பு தைத்திருக்கின்றார்
மாவீரன் சதாம் உசேன் சிறுவயதில் தர்பூசனிபழ வியாபாரம்தான் செய்தார்
அப்படி அடிமட்டத்தில் இருந்து வந்தவர்கள்தான் மாபெரும் தலைவர்கள் ஆயினர், சரித்திரத்தில் நின்றனர்
பிறப்பும், அவன் செய்த தொழிலும் ஒருவனுக்கு இழுக்கல்ல, அவன் என்ன சாதித்தான் என்பதுதான் நோக்க வேண்டிய ஒன்று. தொடக்கத்தை நோக்குவதை விட ஒன்றின் முடிவே கவனிக்கதக்கது
அப்படியாக மோடி இந்திய பிரதமராக உயர்ந்துவிட்டார், இன்னும் அவர் டீ விற்றுகொண்டிருந்தார் என சொல்லிகொண்டிருப்பது சரியாகாது.
பெரும் கோடீஸ்வரனுக்கு மகனாய் பிறந்த, பெரும் கல்வி கற்ற நேரு, இந்திரா போன்றோர் பிரதமர் ஆனது விந்தை அல்ல. பாமரனாய் வந்த சாஸ்திரியும், மோடியும் பிரதமர் ஆனதுதான் வரலாறு
மோடி டீ விற்றவர் என சொல்லிகொண்டிருப்பவனிடம் தமிழக முதல்வராக் இருந்த ராமசந்திரன், ஜெயா எல்லாம் என்ன தொழில் செய்தார்கள் என கேட்டால் சத்தமே இல்லை
நடிகனையும், நடிகையினையும் முதல்வராக்கி பார்த்த தமிழன், மோடி டீ விற்றவர் என உற்சாகமாக கலாய்த்து கொண்டிருக்கின்றானாம்