என்.எஸ் கிருஷ்ணனும் மதுரமும் நடித்த காட்சி
என்.எஸ் கிருஷ்ணனும் மதுரமும் நடித்த காட்சி அது, இருவரும் பேசிகொள்வார்கள் மதுரம் தொடங்குவார் இப்படியாக..
“ஆண்கள் கோபக்காரங்க, எதெற்கெடுத்தாலும் சள்ளுண்ணு விழுவார்கள்
இல்லை பெண்கள்தான் கோபக்காரர்கள்
இல்ல இல்ல ஆம்பிளைங்களுக்குத்தான் நாய் குணம் , பெண்களுக்கு பொறுமை அதிகம்
அப்படியா,
ஆமாங்க அதேதான்
(மதுரத்தை கட்டியணைத்து முத்தம் கொடுக்க செல்கின்றார் கலைவாணர், கோபபட்டு சீறுகின்றார் மதுரம்)
இந்தாய்யா, என்ன நினைச்செ, இதெல்லாம் வேற யார்கிட்டாயவது வச்சிக்க , என்பக்கம் வந்த கொன்னுருவேன் ஜாக்கிரதை
பாத்தியா, பொண்ணுகளுக்குத்தான் கோபம் அதிகம், இப்போ நீ என்னை கட்டிபிடிச்சி பாரு, எனக்கு கோபமே வராது, முத்தம் கொடுத்தாலும் கொஞ்சமும் கோபம் வரவே வராது “
– மறக்க முடியாதவர் என்.எஸ்.கே , பல இடங்களில் பாக்யராஜூக்கு அவர்தான் முன்னோடி