அங்கிள் சைமனுக்கு என்ன சிக்கல்?
மாணவன் பிரகாசின் மரணம் நிகழ்ந்து ஒரு மாதத்தைக் கடந்தும் குற்றவாளிகளைக் கைது செய்யாதது ஏன்? : சீமான் சீற்றம்
எங்கே? கோவையில் பேனர் வைத்து ரகு என்பவரை கொன்றிருக்கின்றார்கள், அதில் சம்பந்தபட்டவரை கைது செய்யாதது ஏன் என கேட்கின்றாரா? கேட்கமாட்டார்
அசோக்குமார் தற்கொலைக்கு காரணம் என சொன்ன அன்புசெழியனை ஏன் கைதுசெய்யவில்லை என கேட்கமாட்டாராம், ஆனால் மாணவன் பிரகாஷ் தற்கொலை செய்ததில் அவனுக்கு மன உளைச்சலை கொடுத்தவர்களை அங்கிள் விடமாட்டாராம்
ஏன் என்றால் அன்புசெழியன் பணவிவகாரமாம் அதனால் என்ன உளைச்சல், மிரட்டல் விடுத்தாலும் தவறில்லையாம், ஆனால் மற்ற வகைகளில் மிரட்டினால் சும்மா விடகூடாதாம்
அங்கிள் சைமனுக்கு என்ன சிக்கல்? மூளையில் எல்லாம் சிக்கல் என சொல்லமுடியாது, காரணம் அப்படி ஒன்று அவரிடம் கிடையாது
வேறு எதிலோ சிக்கல், அது என்னவென்றுதான் தெரியவில்லை