கட்சி பாரம்பரியம் அப்படி


 

Image may contain: text

இப்பொழுது சில உண்மைகள் புரிகின்றது, உண்மையில் “நாம் தமிழர்” கட்சியில் இருந்து கொண்டு, “உங்கம்மா… த்தா என எழுதமுடியா வார்த்தைகளை பேசிகொண்டிருப்பது இந்த அதிமுகவினர்தான்

சாட்சாத் அவர்களே தான்

கலைஞரை , திமுகவினை திட்ட “நாம் தமிழர்” எனும் மாறுவேடத்தில் அலைந்திருக்கின்றார்கள் என நன்றாகவே புலனாகின்றது.

“நாம் தமிழர்” மீது ஏன் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதன் ரகசியமும் விளங்கிற்று, சொந்த கட்சி மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?

ஜெயலலிதா மகள் என சொல்லிகொள்பவரை பற்றி பதிவிட்டால் அந்த நாம் தமிழர் முகமூடியினை கழற்றி வைத்துவிட்டு அதே வார்த்தைகளில் திட்டுகின்றார்கள், சந்தேகமே இல்லை அவர்கள்தான், அதே வார்த்தைகள்தான்.

எந்த பிம்பத்தை காட்டி காலமெல்லாம் அரசியல் செய்யலாம் என நினைத்தார்களோ அதனை காக்கும் பரிதவிப்பில் வந்து நிற்கின்றார்கள் என்றே தெரிகின்றது

அவர்கள் உருவாக்கி வைத்திருப்பது புனிதமான ஜெயா சிலை, அதனை காட்டித்தான் பூசை செய்து, கூட்டம் சேர்த்து வாழ வேண்டும், அவர்கள் தலையெழுத்து அப்படி

அந்த சிலை தகர்க்கபடுமானால் எப்படி தாங்குவார்கள்? அது சிலை மீதான பக்தி அல்ல மாறாக அய்யகோ கூட்டம் கலையுமே என்ற கவலையே அன்றி வேறல்ல‌?

பரிதவிப்பில் கத்துகின்றார்கள் என்றே அர்த்தம்.

ஆனால் அவர்களுக்கு கொஞ்சமும் தன் கட்சி பற்றியோ, ஜெயாவின் வாழ்வின் இன்னொரு பக்கம் பற்றியோ துளியும் தெரியவில்லை என்பதுதான் பரிதாபம்.

1964களிலே ஜெயா எம்ஜிஆர் இடையே ஒரு புரிந்துணர்வு இருந்தாலும் அடிக்கடி தகறாறும் வந்திருக்கின்றது, எம்ஜிஆரின் சில பிரமாண்ட படங்களில் ஜெயலலிதா இல்லை, ஜெயா வீட்டு கிரகபிரவேஷத்திற்கும் ராமசந்திரன் வரவிலை.

விலகலும், நெருங்கலுமாக இருவரும் சுற்றி வந்திருக்கின்றார்கள், காரணம் என்ன? இருவருமே யாரையும் நம்பாத, தான் இருக்கும் இடத்தில் நானே தெய்வம் எனும் அடிப்படை குணம் கொண்டவர்கள்

அப்படித்தான் இருந்திருக்கின்றார்கள், ஒருவர் சுயநலத்திற்கு இன்னொருவரை நேரம்பார்த்து பயன்படுத்திவிட்டு விலகி இருக்கின்றார்கள்.

ராமசந்திரன் கட்சி தொடங்கும்பொழுதோ, அவர் முதல்வராகி தர்மயுத்தம் நடத்தியபொழுதோ ஜெயா இல்லை

அப்பொழுது ஜெயா எங்கிருந்தார்? நடன பள்ளியா, சினிமாவா? எதிர்காலம் தெரியா திசையில் குழப்பத்தில் நடந்துகொண்டிருந்தார்.

1977க்கு பின் தமிழக திரையுலம் மாற ஜெயாவிற்கு வாய்ப்ப்பு குறைந்தது, நடனபள்ளி அது இது என தடுமாறி நின்றார் ஜெயலலிதா

சசிகலா எல்லாம் அப்பொழுது எங்கிருந்தார் என யாருக்கும் தெரியாது

ஜெயா சோபன்பாபு உறவு ஏற்பட்டது இந்த காலகட்டத்தில்தான், இது நாம் சொல்லவில்லை ஜெயலலிதா அளித்த பேட்டிகளும் , இன்னும் ஏராளமான பத்திரிகை ஆதாரமும் உண்டு

இந்நிலையில் மதுகடைகள் திறந்து சர்ச்சையில் சிக்கிய ராமசந்திரனுக்கு தாய்குலங்களை வசீகரிக்க ஒரு பெண்முகம் தேவைபட்டது, சரோஜா தேவிதான் ராமசந்திரன் விரும்பிய முகம் அவரோ மறுத்துவிட்டார்

அதன்பின்புதான் ஜெயலலிதா கொண்டுவரபட்டார், ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தபின் சோபன்பாபு சென்னைக்கே ஏன் வரவில்லை என்பதெல்லாம் நமக்கு தேவையில்லா விஷயம்

அதன்பின் டெல்லிக்கு ஜெயா எம்பியாக அனுப்பபட, ராமசந்திரனை உருவாக்கிய இந்திரா ராமசந்திரனுக்கு செக் வைக்க ஜெயலலிதாவினை பாசத்தோடு நோக்குகின்றார்

என்னது? என் கட்சியில் எனக்கே போட்டியா? என கொதித்த ராமசந்திரனுக்கு உடல் கோறாறு வருகின்றது, அத்தோடு இந்திராவும் சாக நிலமை சிக்கல் இல்லை, ஆனாலும் ஆர்.எம் வீரப்பன் போன்றோர் ஜெயலலிதாவினை விரட்டியே தீருவது என்ற கொள்கைக்கு வந்தாயிற்று,

அதனை ஆசீர்வாதம் மட்டும் செய்தார் ராமசந்திரன்.

ஒருவர் மீது சந்தேகம் கொண்டுவிட்டால் அவரை ஒழித்துகட்டுவது ராமசந்திரன் ஸ்டைல், ஜெயா ராமசந்திரன் பனிப்போர் ஆரம்பமாயிற்று

இக்காலகட்டங்களில் ஜெயா குறித்து ராமசந்திரன் எழுதிய கடிதங்களும், ஜெயா மனம் வெறுத்து திமுகவில் இணைய தூதுவிட்ட காலங்கள் இவை. முரசொலிமாறன் தடுக்கவில்லை என்றால் நிச்சயம் ஜெயா திமுக பக்கம் வந்திருக்கலாம்.

(டேய் என்ன மிரட்டியவனே, ஜெயா அப்படி திமுகவில் இணைய எழுதிய கடிதம் திமுகவின் ரகசிய கோப்புகளில் இன்னமும் உண்டு, அதாவது கலைஞரை தலைவராக ஏற்றுகொள்ள உங்கள் ஜெயலலிதா முன்வந்திருக்கின்றார்)

தடுமாறிய ஜெயலலிதாவிற்கு விதி ராஜிவ் உருவத்தில் வந்தது , காங்கிரஸ் ஜெயலலிதாவினை தூக்கி பிடிக்கின்றது, அவருக்கு துணைமுதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்ற அளவு நிர்பந்தங்கள்.

அமெரிக்காவில் ராமசந்திரன் சிகிச்சையில் இருந்தபொழுது, ராஜிவிற்கு ஜெயா தன்னை முடிசூட்ட எழுதிய கடிதமும், இன்னும் பிற சாட்சிகளும் ராமசந்திரனை சென்றடைய, கிட்னி பெரிதா கட்சி பெரிதா என அலறிய ராமசந்திரன் ஓடி அடித்து சென்னைக்கு வந்து நடத்திய அலறல் ஆலோசனை கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்கது

இனி ஜெயாவினை பற்றி முடிவெடுத்தாகவேண்டும் என்ற நிலையில் இருந்தபொழுது ராமசந்திரன் காலி

அதன்பின் நடந்தவைகள் எல்லோருக்குமே தெரியும்

அதுவும் முதலில் ஜாணகிக்கு எதிராக பெற்ற வெற்றியினை கூட இது எம்ஜிஆரால் கிடைத்த வெற்றி எனக்கு வேண்டாம் என சொல்லி அரசியலை விட்டு கிளம்பிய ஜெயலலிதாவினை நடராஜன் தான் பிடித்து நிறுத்தினார்

அந்த அளவு ராமசந்திரன் மீது ஒருவித கசப்பு ஜெயாவிற்கு இருந்திருக்கின்றது

ஆக ஜெயலலிதா என்பவர் ஏதோ பிறவி போராளி போலவும், 5 வயதிலே தவழ்ந்து வந்து அரசியலில் கலந்தது போலவும் பேசிகொண்டிருக்கின்றான் சிலர்

அப்படியும் நாம் என்ன சொல்லிவிட்டோம்?

மகள் என ஒருத்தி வந்து நிற்கின்றாள், சோபன் பாபு என் தந்தை என்கின்றாள், டி.என்.ஏ சோதனைக்கு தயார் என்கின்றார்

சந்தியாவின் நெருங்கிய சொந்தம் லலிதா ஆம், ஜெயலலிதாவிற்கு பெண் குழந்தை இருந்தது என்கின்றார்

சந்தியாவின் உறவினருக்கு தெரியாததெல்லாம் இங்கு முட்டு சந்தில் ஜெயா கொடிபிடிப்பவனுக்கு தெரியுமாம்

இதனை ஊடகங்கள் சொல்லி அது பரவித்தான் நாமும் சொன்னோம்

இதற்கு வந்து என்னவெல்லாமோ சொல்லி திட்டுகின்றார்கள்

ஒருவன் ஜெயா சமாதி முன் என் கொடும்பாவி எரிப்பானாம், ஏண்டா?, சோபன்பாபுவுக்கும் எனக்கும் கெட் “டுகெதர் உண்டு ” என சொன்னது யார்? சாட்சாத் உன் தலைவி, அவரே தான்

சந்தியா மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது என நானா சொன்னேன்? சொன்னது அவரின் ரத்த உறவு லலிதா.

கொஞ்சமும் யோசனையே இன்றி இவர்கள் குதிக்கும் குதியினை பார்த்தால் “நாம் தமிழர்” என்பது இந்த அறிவுகெட்டாவ்ர்களின் முகமூடி கட்சி என்பது புரிகின்றது

டேய் கொடும்பாவி கொளுத்துபவனே, அதற்கு முன்பு வெற்றிகொண்டான் போன்றவர்கள் உன் தலைவியினை பற்றி பேசியதை கேட்டு விட்டு போ

அவ்வளவு பேச்சுக்களை வெற்றிகொண்டான் பேசியிருந்தார்

அதில் ஒன்றை கூட உன் தலைவி மறுக்கவில்லை என்பதும், வெற்றிகொண்டான் மீது ஒரு சிறு கீறலும் விழவில்லை என்பதும் இன்னொரு கோணம்., அதனை கேட்டுவிட்டு போ

என் கொடும்பாவி கொளுத்தமாட்டாய், உன்னை நீனே கொளுத்தி கொள்வாய், அப்படியே அந்த கல்லறையினையும் கொளுத்தினாலும் கொளுத்துவாய்


ராமசந்திரன் “புரட்சி தலைவனாகவும்”, ஜெயலலிதா “தெய்வ தாயாகவும்” தெரிந்தவர்களுக்கு, கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என தெரிவதில் என்ன ஆச்சரியம்?

கட்சி பாரம்பரியம் அப்படி


 

நல்ல வேளையாக வள்ளுவர் கோட்டமும், வள்ளுவனுக்கு சிலையும் கலைஞர் வைத்துவிட்டார்

இல்லையென்றால் குறள் எழுதியது சாலமோன் பாப்பையா என முதல்வரே சொல்லிவிட்டால் என்னாகும்? தமிழக வரலாறே மாறி தொலைந்துவிடாதா?

கலைஞர் நிச்சயம் தீர்க்கதரிசி..