மூன்று கொள்ளையர்கள் வளர்த்த ஒருவன் கெட்டிகார பிள்ளையாம்

Image may contain: 1 person, smiling, close-up

பத்திரிகைகளில் பாரம்பரியமுள்ளது இந்து பத்திரிகை ஆனால் இப்பொழுது சந்து பத்திரிகையாக, யாருக்கோ சிந்து பாடும் அளவு மாறிவிட்டது

கடந்த செவ்வாய்கிழமை வந்த கட்டுரை அப்படி, அந்த கட்டுரை உலக பிரச்சினை, இந்திய பொருளாதாரம் உட்பட பல விஷயங்களை சொன்னாலும் பரவாயில்லை, அது சொன்னது தன் சுய உழைப்பில் பெரும் பணக்காரர் ஆன விவேக் என்பவரை பற்றியது

அவர் ஏதோ வாரன் பெப்பட் போலவும், பில் கேட்ஸ் போலவும், அரபு எண்ணெய் கிணறில் கஷ்டபட்ட அம்பானி போலவும் பில்டெப் கொடுத்து எழுதியிருக்கின்றது

விவேக்கின் வெற்றிக்கு காரணம் யாராம் தெரியுமா? ஜெயா, சசிகலா மற்றும் இளவரசி என்ற கண்டிப்பு மிக்க பெண்களின் வளர்ப்பாம், அவ்வளவு கண்டிப்பாகவும் ஏழ்மையாகவும் வளர்த்தார்களாம்

ஜெயா முருங்கைகாயினை உரித்து இவர் வாயில் ஊட்டுவாராம் (இனி பாக்யராஜின் முருங்கைகாய் பார்முலா போனது, தொழிலதிபர் ஆகவேண்டுமா முருங்கைக்காய் சாப்பிடுங்கள்) அப்படி எதையும் வீணாக்காமல் வளர்ந்தவராம்

இந்த மூன்று பெண்மணிகளும் யார்? பெரும் கொள்ளைகாரிகள் என சுப்ரீம்கோர்ட் சொல்லிவிட்ட அந்த மூவரும்தான், மூன்று கொள்ளையர்கள் வளர்த்த ஒருவன் கெட்டிகார பிள்ளையாம்

அதுவும் அவர் போயஸ் தோட்டத்தில் பட்டம் எல்லாம் விட்டாராம், அதற்கு போலிஸ் காவல் எல்லாம் உண்டாம்

பெரும் தொழிலதிபர்களும் சில சமயம் இந்திய தலைவர்களுக்கே அனுமதி கிடைக்காத போயஸ் கார்டனில் இவர் போலிஸ் துணையோடு பட்டம் விட்டாராம், போலிஸ் என்ன கொடுமை எல்லாம் அனுபவித்திருக்கின்றது

அதோடு பெரும் கொடுமை இவர் ஆஸ்திரேலியா படிக்க போனாராம், அத்தை 5000 டாலர் கொடுத்தாராம். அந்த 5000 டாலரும் 3 நாளில் காலியாம், உடனே சிங்கப்பூருக்கு போன் செய்தாராம் உடனே ஒரு உறவினர் அலறி அடித்து சென்று 5000 டாலர் கொடுத்து, யாரையும் தொந்தரவு செய்ய கூடாது, நீதான் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்றாராம்

முதல் 5000 டாலர் மூன்று நாளில் தீர அடுத்த 5000 டாலர் அவர் படித்து முடிக்கும் அளவு கையில் இருந்ததாம், அது போக இவர் ஒரே பாட்டில் உழைத்து படித்து முடித்து இந்தியா வந்தாராம், படிக்கும் பொழுதே சலூன் கடை வரை வேலை செய்து சம்பாதித்தாராம்

இங்கு வந்த வேகத்தில் ஜாஸ் சினிமா முதல் எல்லாம் வாங்கி குவித்தாராம், ஆம் 28 வயதிலே இந்த மாபெரும் சாதனையினை நிகழ்த்தியிருக்கின்றார்

ஆக ஆஸ்திரேலியாவில் பீட்சா பாய், சரக்குகளை ஏற்றி இறக்குதல் மற்றும் முடி வெட்டினால் இங்கு வந்து தியேட்டர் வாங்கலாமாம் சொல்வது யார் என்றால் இந்து பத்திரிகை

அதுவும் இந்தியா வந்தும் தியேட்டர் வாங்க சில கோடிகள் குறைந்ததால் அதை சம்பாதிக்க ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தாராம், அங்கு இவர் யாரென தெரியாதாம்

ஒரு வருடத்தில் தியேட்டருக்கு குறைவான சில கோடிகளை சென்னையிலே சம்பாதித்துவிட்டு தியேட்டர் வாங்கிவிட்டாராம்

சென்னையில் ஒரு வருடத்தில் ஏராளமான கோடிகளை சம்பாதிக்க என்ன தொழில் இருக்கின்றது என தெரியவில்லை

அவசரமாக சில கோடிகளுக்காக சாதரணமாக ஒரு கம்பெனியில் வேலை செய்தபொழுது ஜெயா, சசிகலா சிறையில் இருந்தார்களாம்,இவர் அவர்களை சந்திக்க விடுமுறை கேட்டாராம், அவர்கள் இல்லை என்றார்களாம் நான் யார் தெரியுமா? என சிரித்துகொண்டே பிளாஷ்பேக் சொன்னாராம். அவ்வளவு எளிமையானவராம்

(அநேகமாக அந்த கம்பெனி இப்பொழுது இவரால் விழுங்கபட்டிருக்கும், அதுபற்றி யாரும் சொல்லமாட்டார்கள்)

இன்னும் என்னவெல்லாமோ சொல்லி அவர் ஒரு பெரும் தொழில் அதிபர் என்பது போல சுற்றி முடிக்கின்றது இந்து பத்திரிகை

அந்த பத்திரிகை மீது இருந்த அபிமானமே போயிற்று

யார் இந்த விவேக்???

ஜெயா சசிகலாவின் பினாமியாக தத்தெடுக்கபட்ட சுதாகரன் சின்ன எம்ஜிஆர் என சுற்ற, அட இவன் உருப்படமாட்டான் என கஞ்சா கேசில் உள்ளே தள்ளிய பின் அவர்களுக்கு கையடக்கமாக உருவாக்க பட்ட அடுத்த வளர்ப்பு மகன் இந்த விவேக்

ஒரு கொள்ளை கூட்டத்தின் பினாமி,

சுதாகரன் சொதப்பிய இடத்தினை மிக கச்சிதமாக பயன்படுத்திய ஒரு நபர், அவ்வளவுதான் விஷயம்

அவரை தாமஸ் ஆல்வா எடிசன், மார்கன், வாரன் பெப்பட், பில்கேட்ஸ், டோனி பெர்னாண்டஸ் போன்றோருக்கு நிகராக எழுதிகொண்டிருக்கின்றது இந்து

எப்படிபட்ட அயோக்கியதனம் இது??

ஆக மொத்ததில் தமிழகம் உருப்பட வேண்டுமென்றால் இந்த மாதிரி பத்திரிகைகளை ஒழிக்க வேண்டும்