மோடி தன் காதுகளை பொத்திகொள்வார்
ஏதோ காங்கிரஸ் ஆட்சியில் குஜராத் நாசமானதை போலவும், மோடி வந்துதான் அதனை காப்பாற்றியது போலவும் பிம்பம் காட்டிகொண்டிருக்கின்றார்கள்
அதில் ஒன்றுதான் இந்திரா மோர்பி பக்கம் வந்தபொழுது மூக்கை மூடிகொண்டு வந்தார் என்பது
அது ஆகஸ்டு 11/1979 அன்று பெரு வெள்ளத்தில் அப்பகுதி சிக்கி இருந்தது, பெரும் அழிவு கால்நடைகள் செத்து துர்நாற்றம் வீசியது
அதனை நேரில் காண சென்ற இந்திரா மூக்கை மூடிகொண்டார், அவர் என்ன யாராக இருந்தாலும் மூக்கை மூடத்தான் செய்வார்கள்
அப்படி இயற்கை சீற்றத்தால் நடந்த விஷயத்தை ஏதோ குஜராத்தினை காங்கிரஸ் நாற விட்டிருந்தது போலவும், இந்திராவே அங்கு வர விரும்பாதது போலவும், மோடிதான் அதனை காப்பாற்றியது போலவும் கட்டு கதைகள்
உண்மையில் குஜராத் மேம்பட்ட மாநிலம், அன்றே உழைப்ப்பும் அமைதியும் நிரம்பிய மாநிலம். அன்றே குஜராத் கப்பல்கள் ஆப்ரிக்கா எல்லாம் சென்றிருக்கின்றன, அங்கு தவித்துகொண்டிருந்த வாஸ்கோடகாமாவினை இங்கு அழைத்து வந்ததே குஜராத் கடலோடி என்கின்றது வரலாறு
அந்த அளவு தொழில் முனைவு மிக்கவர்கள்
அந்த குஜராத்தினை மோடி அல்ல லல்லு பிரசாத் அவரின் மனைவி அட அவ்வளவு ஏன்? நமது ஊர் பழனிச்சாமியிடம் கொடுத்தால் கூட நன்றாகத்தான் ஆள்வார்கள், அங்குள்ள யதார்த்தம் அது
சரி ஒரு வாதத்திற்கு குஜராத்தை மோடி முன்னேற்றினார் என வைத்துகொண்டாலும் கூட, 3 ஆண்டு ஆட்சியில் இந்தியாவினை என்ன செய்துவிட்டார்? ஏன் பெரும் முன்னேற்றம் என எதுவுமில்லை
இதனைபற்றி பேசினால் இந்திரா மூக்கை பொத்தினார் என கதையளக்கும் மோடி தன் காதுகளை பொத்திகொள்வார்