கம்யூனிச உலகிற்கு எவ்வளவு பெரும் இழப்பு இது????

சோவியத் கால விஷயங்களை படித்தால் சில விஷயங்கள் மகா ஆச்சரியமாக இருக்கின்றன, அந்த நாடு அப்படி இருந்திருகின்றது

நிலம் எல்லாம் அரசின் வசமம், ஒரு விவசாயி அரசிடம் அனுமதிபெற்று விவசாயம் செய்யலாம். ஆனால் நிலத்தை சொந்தம் கொண்டாடவே முடியாது

இது என் பூர்வீகம் எனக்கு தாருங்கள் என்றேல்லாம் கேட்கவே முடியாது, கேட்டால் தரவே மாட்டார்கள், உழைக்கலாம் அதோடு சரி

இதனை படிக்கும்பொழுது மகா ஆச்சரியமாக இருந்தது , இந்தியாவிலே இந்த சோவியத் வாழ்வினை நான் வாழ்ந்திருக்கின்றேன்

இந்த சோவியத் தத்துவத்தைத்தான் என் பெரியப்பனும் சொல்லிகொண்டிருந்தான், பாட்டனார் நிலத்தை பிரிக்கவே மாட்டேன் முடிந்தால் அதோ அந்த தொங்கல் வயலில் விவசாயம் செய், முடிந்தால் பிழைத்துகொள் , செத்தால் சந்தோஷம்

பாகபிரிவினை எல்லாம் ஒரு காலமும் நடக்காது என சொல்லிகொண்டிருந்தான்

இது பொது சொத்து நானே நிர்வகிப்பேன் உனக்கு அதோ ஒரு மூலை, அதில் முடிந்தால் வாடகைக்கு விவசாயம் செய், உரிமை எல்லாம் கிடைக்கவே கிடைக்காது என்பதே இரும்பு கொள்கை என நிலைத்து நின்றார்

எந்த சொத்து என்றாலும் இதேதான் அவரின் முடிவு, கத்தியும் கதறியும் மனிதர் அசைந்தார் இல்லை.

அம்மனிதனை நினைத்து முன்பெல்லாம் ஆத்திரம் வந்தது

இப்பொழுதுதான் புரிகின்றது, மனிதன் மாபெரும் கம்யூனிஸடாக வாழ்ந்திருக்கின்றான்

அந்த அளவு லெனினிய மார்க்சிய தாக்கம் அவனுக்குள் இருந்திருக்கின்றது, எப்படி என்றுதான் தெரியவில்லை படிக்காத மேதை போலிருக்கின்றது

ஒரு சிறிய கிராமத்தில் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்ததால் இந்த உலகம் மிக பெரும் கம்யூனிச சிந்தனையாளனை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கின்றது

கம்யூனிச உலகிற்கு எவ்வளவு பெரும் இழப்பு இது????

லெனின், மாவோ, காஸ்ட்ரோ வரிசையில் வரவேண்டிய ஒரு பொதுவுடமைவாதி வள்ளியூர் பக்கம் ஒரு சிறிய கிராமத்தில் முடங்கியது வரலாற்று சோகம்.