மறுபடியும் சிக்கலில் சிக்குகின்றார் சிம்பு…

மறுபடியும் சிக்கலில் சிக்குகின்றார் சிம்பு, மனிதர் இப்பொழுது அமைதியா இருந்தாலும் முற்பகம் செய்தால் பிற்பகல் விளையும் அல்லவா

அப்படி அ..அ.அ என்றொரு படம் முன்பு வந்தது, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை கிட்டதட்ட புத்த பிட்சு கோலத்தில் நிறுத்தியிருந்தது. எனக்கு 20 கோடி நஷ்டம் ஒரே காரணம் சிம்பு சரியாக ஒத்துழைக்கவில்லை என்பதுதான், அதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பிராது கொடுக்க போகின்றேன் என கிளம்பிவிட்டார்

அன்னார் கூற்றுபடி சிம்பு இவரிடம் அழுதாராம், உடனே இவரும் பரிதாபபட்டு அவருக்கு வாய்ப்பு வழங்கினாராம், ஆனால் அட்வான்ஸ் வாங்கியதில் இருந்து சிம்பு மாறிவிட்டாராம், கடும் அழிச்சாட்டியம் செய்து ராயப்பன் நிலமை இப்படி ஆகிவிட்டதாம்

சிம்புவினை வைத்து படமெடுக்கும் மணிரத்னத்திற்கு இப்பொழுது எப்படி இருக்குமோ தெரியாது

சிம்பு முற்பகல் செய்து பிற்பகலில் மாட்டியிருக்கலாம், இப்பொழுது விஜயகாந்த் அலுவலக பக்கம் கேட்டால் என்ன சொல்வ்வார்கள்? இப்படி சொல்லலாம்

“இந்த மைக்கேல் ராயப்பன் தனக்கு ராதாபுரம் தொகுதி வேண்டும் என்று கேப்டனிடம் அழுதார், கேப்டனும் தொகுதி கொடுத்து அவரை எம்.எல்.ஏவும் ஆக்கினார்

ஆனால் சொல்லாமல் கொள்ளாமல் ஜெயா அணிக்கு தாவி கேப்டனுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய்தார் ராயப்பன்

முற்பகல் செய்தால் விளையுமா விளையாதா? கேப்டனுக்கு அவர் செய்த துரோகம் சிம்பு வடிவில் தாக்கி இருக்கின்றது”

இந்த கேயாஸ் தியரி என்பது உண்மைதான் போலிருக்கின்றது.

ஒருவேளை விஜயகாந்த் கட்சியின் ஸ்லீப்பர் செல்லாக சிம்பு இருப்பாரோ?


படம் வந்து சில மாதங்கள் ஆகின்றன, அப்பொழுதெல்லாம் நான் அமைதியானவன், அடக்கமானவன்,அழிச்சாட்டியம் செய்யாதவன் என அமைதியாக இருந்த மைக்கேல் ராயப்பன் இப்பொழுது திடீர் என குதிப்பது ஏன்?

இங்கு இம்மாதிரி விஷயங்கள் கிளறபடுகின்றது என்றால் ஏதோ ஒரு விஷயம் அமுக்கபட போகின்றது என பொருள்

ஆக விரைவில் சிம்புவும் மைக்கேல் ராயப்பனும் சோடா பாட்டில் வீசி சண்டையிட போகின்றார்கள், அந்த இடைவெளில் அன்புசெழியன் வந்து வட்டி வசூலித்துவிட்டு ஓடிபோக போகின்றார்