தெய்வம் நின்று கொல்லும்

தென்மாவட்டத்தில் வெள்ளமாம், மிக சரியாக எவனெல்லாம் ஓடைகளை அடைத்து வைத்திருக்கின்றான் என மிக தெளிவாக தெரியும் நேரமிது

எவனெல்லாம் இது ஓடை அல்ல, என் நிலம் என அடைத்து வைத்திருந்தானோ, அவனெல்லாம் அய்யய்யோ இது ஓடைதான் என உடைத்து நீரை அனுப்பிகொண்டிருக்கின்றானாம்

ஆக இந்த கோர்ட்கள், ஆவணங்களை எல்லாம் காட்டி ஏமாற்றும் மனிதனை இயற்கை மிக சரியாக காட்டிகொடுத்திருக்கின்றது

கன்னியாகுமரி மாவடத்தில் எங்கெல்லாம் அனுமதிபெறாத செல்போன் கோபுரங்கள் எல்லாம் முறைகேடாக அமைக்கபட்டிருகின்றது என்பதெல்லாம் இப்பொழுதுதான் தெரிகின்றதாம்

இந்த நிலுவையில் இருக்கும் ஓடை ஆக்கிரமிப்பு வழக்குகளின் நீதிபதிகள் இப்பொழுது ஒரு சுற்று சுற்றினால் உடனே ஆண்லைன் தீர்ப்பு எழுதிவிடலாம்

தெய்வம் நின்று கொல்லும், சொல்லும் என்பது இதுதான். அட்டகாசமாக ஆக்கிரமிக்கபட்ட ஓடைகளை இயற்கை காட்டிகொடுத்துகொண்டிருக்கின்றது