நர்ஸிங் படித்துவிட்டு எங்கு செல்வார்கள்?
இந்த நாட்டில் அரசுபணி விவகாரங்களில் எல்லோருக்கும் இழைக்கபடும் அநீதி போல நர்சுகளுக்கும் இழைக்கபடுகின்றது, நர்சுகள் போராடுகின்றார்கள்
நீதிமன்றமும் சம்பளம் போதவில்லை என்றால் கிளம்புங்கள் என சொல்லிவிட்டதாம், நர்ஸிங் படித்துவிட்டு எங்கு செல்வார்கள்? நீதிபதி பக்கம் அமர்ந்து தீர்ப்பா எழுதமுடியும்
இந்நாட்டில் இந்த நீதிபதிகளும் அவர்கள் உரிமைக்காக போராட ஒரு காலம் வரும் அப்பொழுது கேட்க வேண்டிய கேள்விகள் நிரம்ப இருக்கின்றன, இப்பொழுது பேசினால் நீதிமன்ற அவமதிப்பு என்பார்கள்
அந்த நர்சுகள் ஒரு பக்கம் போராடுகின்றார்கள் என்றால், இப்பொழுது டாக்டர்களும் சேர்ந்துவிட்டார்களாம்
உண்மையில் இவை எல்லாம் மிக மிக வருத்தமான செய்திகள்
காரணம் மருத்துவ உலகின் அச்சாரமே டாக்டர்களும், செவிலியர்களுமே
உயிர்காக்கும் உன்னத பணியினை அவர்கள்தான் செய்கின்றார்கள், கிட்டதட்ட சூரியன் போன்ற பணி அவர்ர்களுடையது, அத்தனை உயிர்கள் அவர்களால் பாதுகாப்பும் மறுபிறப்பும் அடைகின்றன
அந்த புனிதமான தொழில்சேவையாளர்களை இப்படி நடுதெருவில் போராட வைத்தால் அத்தேசம் நல்ல திசை நோக்கி செல்லவில்லை என பொருள்
ஒவ்வொரு நாடும் கோடிகணக்கான பணங்களை கொட்டி உலகெல்லாம் இருந்து மருத்துவர்களையும், நர்சுகளையும் அழைத்து அவர்களுக்கு குடியுரிமை கூட வழங்கி பொன்போல் பாதுகாக்கின்றன, இவர்களின் அருமை அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது
இங்கோ நடுதெருவில் நிறுத்தியாயிற்று, இதில் நீட் தேர்வில் இனி மருத்துவர் வரமுடியாது என இம்சை வேறு. இதோ வந்தவர்ர்களுக்கு என்ன கொடுத்து கிழித்துவிட்டோம்?
இவர்களுக்கான கோரிக்கைகள் உடனே நிறைவேற்றபட வேண்டும். கூவத்தூரில் இன்னும் சில விடுதிகளில் எம் ஏல் ஏக்களுக்கு கிடைந்த உபசரிப்பும், இன்னும் சில அரசியல்வாதிகளின் குடும்பத்தார் வீட்டில் நடந்த ரெய்டுகளின் சொத்து மதிப்பும் திகைக்க வைக்கும் மாநிலத்தில்தான் இவர்கள் உரிமை குரலும் எழுப்புகின்றார்கள் என்பது நாணி தலைகுனிய வேண்டிய விஷயம்
நெஞ்சை கனக்க செய்யும் இந்த போராட்டத்தில் ஒரு காமெடியும் நடந்தது
இந்த ஜூலி என்பவர் நானும் முன்னாள் நர்ஸ் என போராட சென்றிருக்கின்றார், அந்த பய புள்ளைக்கு எங்கு ஒரு கூட்டம் கூடினாலும் அதில் நின்று கேமரா முன் கத்தும் வியாதி இருக்கும் போல
அப்படி இங்கும் கத்த சென்றிருக்கின்றது
நீதான் நர்ஸ் தொழிலை விட்டு பிக்பாஸ், காம்பயர் என திசைமாறி வேறு தொழிலுக்கு போயாயிற்றே, இங்கு காயத்ரி, கலா மாஸ்டர் எல்லாம் இல்லை ஓடு என விரட்டிவிட்டார்களாம்
ஒரு போராளியினை பெர்பார்மென்ஸ் செய்யவிடாத போலிஸ் ஒழிக என சொல்லிவிட்டு வந்துவிட்டாராம் ஜூலி
நல்ல வேளையாக இவரை உள்ளே விடவில்லை.
அந்த செவிலியிலருக்கும் மருத்துவருக்கும் உரிமைகளை கேட்குமுன் கொடுத்துவிட வேண்டும், அவர்கள் செய்யும் பணி மகத்தானது, இறைவனுக்கு அடுத்து உயிரை காக்கும் மிக புனிதமான பணியினை செய்துகொண்டிருப்பவர்கள் அவர்கள்