இப்போது வந்திருக்கும் புயலுக்கு ஒக்கி என பெயராம்
புயலுக்கு பெயர் எப்படியும் பெயர் சூட்டட்டும், அதெல்லாம் பன்னாட்டு வானிலை நிபுணர்கள் கூடி புயல் விவரங்களை பதிவு செய்ய செய்திருக்கும் ஏற்பாடு
பல பெயர்கள் இருக்குமாம், அடுத்து வர கூடிய பல புயல்கள்ளுக்கு இப்பொழுதே பெயர் ரெடியாக வைத்திருகின்றார்களாம்
இப்போது வந்திருக்கும் புயலுக்கு ஒக்கி என பெயராம், வங்க மொழியில் கண் என்று பெயராம்.
என்ன பெயர் வைத்தாலும் சரிவராது போல, மிக பொருத்தமாக வரவே வராது போல
இல்லாவிட்டால் 1991ல் தென் தமிழ்நாட்டை தாக்கிய புயலுக்கு குஷ்பு என்றல்லவா பெயர் வைத்திருக்க வேண்டும்?
குஷ்பு தமிழகத்தினை புரட்டி போட்ட அளவிற்கு அந்த புயல் புரட்டி போட்டது? நிச்சயம் இல்லை
அந்த அளவு 1990களில் குஷ்பு எனும் பெண் தமிழகத்தில் பல்லாண்டுகள் தொடர்ந்து பெரும் சூறாவளியாக வீசிகொண்டிருந்தார், அந்த பாதிப்புகள் ஏராளம்
அதிலிருந்து தமிழகம் இன்னும் மீண்டுவிட்டதா? என்றால் இல்லவே இல்லை, மீளவும் முடியாது. அப்படி மிக மிக வலுவான புயல் அது.
.
அதனால் 1991ல் தென்பகுதியினை தாக்கிய அந்த புயலுக்கு குஷ்பு என்று பெயர் சூட்டி வரலாற்றை திருத்துமாறு சங்கம் இந்திய வானிலை இலாக்காவிற்கும், தென்கிழக்காசிய வானிலை இலாக்காவிற்கும் கோரிக்கை வைக்கின்றது
வரலாறு மகா முக்கியம் வானிலை இலாக்காவினரே..