ஒக்கி புயல் ஓங்கி அடிக்குது…..
ஒக்கி புயல் பற்றி முன்கூட்டியே மத்திய அரசு எச்சரிக்கவில்லை: பினராயி விஜயன் குற்றச்சாட்டு
குமரி போலவே தென் கேரளாவிலும் ஓக்கி புயல் அகதளம் செய்திருக்கின்றது, மழை கேரளாவிற்கு புதிது அல்ல வெறும் கனமழை வரும் என எதிர்பார்த்த கேரளம் புயலை எதிர்கொள்ளமுடியாமல் திகைத்து நிற்கின்றது
உண்மையில் மத்திய அரசு புயல் பற்றி எச்சரிக்கவில்லை, இதனை பிரணாய் விஜயன் அழுத்தி சொல்கின்றார். வானிலை இலாக்காவினை கட்டுபாட்டில் வைத்திருக்கும் அரசு மிக துல்லிய தகவல்களை கொடுத்திருக்க வேண்டும் என்கின்றார்
அவர் தைரியம் அப்படி
தமிழகத்திலும் ஒரு முதல்வர் இருக்கின்றார், வாய் திறக்கட்டும் பார்க்கலாம்???
“அண்ணே இப்போ என்ன நடந்துட்டு, ஒரு பாலம் இடிஞ்சிட்டு அவ்வளவுதானே? இதுக்கு ஏண்ணே குதிக்கிறீங்க
டேய் மக்களோட வரிபணம்டா
பின்ன இது தெரியாதா? ஆனா வெள்ளத்தில் இடிஞ்சதுகு யார் என்ன செய்யண்ணே? புரியாம பேசாதீங்க
டேய் பாலம் கட்டுறதே வெள்ளம் வரும் காலத்தில் கடந்து போகத்தாண்டா, அப்பொழுது இடிந்தால் எப்படி?
ம்ம் அண்ணே, இப்போ இன்னொரு பாலம் கட்டினா முடிஞ்சி போற விஷயம் இதுக்கு ஏண்ணே
அப்படியா,, எப்படி கட்டுவீங்க
அதுக்கு டெண்டர் விட்டு கட்டுவோம்
ஓஹோ அதாவது இன்னொரு பாலம் கட்டி, அதுல கமிஷன் அடிக்க
ஹிஹிஹிஹ்
இதானடா உங்க திட்டம்
அப்படி இல்லண்ணே, உடைஞ்ச பாலத்த உடனே கட்டி மக்கள் சேவை செய்வோம்ணே
அடேய் கட்டும்போதே ஒழுங்கா கட்டினா என்னடா?
இப்படி உடைஞ்சாத்தாணே நாம திரும்ப கொடுத்து மக்கள் நம்பிக்கைய பெற முடியும்
அட நாயே நீ எல்லாம் ஏண்டா அந்த பாலத்துக்கு அடியில நிற்காமல் போயிட்ட..”
வேலூரில் சீதாராமைய்யர் என்றொருவர் இருந்தாராம், பஞ்சாங்கம் எல்லாம் எழுதியிருக்கின்றாராம்
அவர் எழுதிய பஞ்சாங்கபடி கன்னியாகுமரியில் இந்த கார்த்திகையில் வெள்ளைம் வரும் என எழுதபட்டிருந்ததாம், அது அச்சு பிசகாமல் நிறைவேறிவிட்டது என பஞ்சாங்க விசுவாசிகள் கொண்டாடிகொண்டிருக்கின்றார்கள்.
பஞ்சாங்கம் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை. குஷ்பு முதல்வர் ஆவார், மத்திய அமைச்சர் ஆவார் என்ற குறிப்புகளோடு பஞ்சாங்கம் எழுதபட்டிருந்தால் ஒழிய சங்கம் எந்த பஞ்சாங்கத்தையும் நம்பாது.
கன்னியாகுமரி மாவட்ட பேரழிவினை தேசிய பேரிடராக மாற்றுவதில் அடங்கியிருக்ன்றது பொன்னார், தமிழிசையின் வெற்றி
ஆனால் அவர்களோ மோடியிடம் பேசினோம், அவர் செயலருடன் விவாதித்தோம் என்றளவில் இருக்கின்றார்கள்
இந்த புயல் அவர்களின் டெல்லி செல்வாக்கு எப்படி இருக்கின்றது என சோதிக்க நல்ல சவால்
ஆனால் இவர்களோ விவேகானத்தர் பாறையில் முட்டி முட்டி அழுவார்கள் போலிருக்கின்றது, அவ்வளவுதான் இவர்களுக்கு டெல்லியில் இடம்