ஆர்.கே நகர் இடைத்தேர்தல் களைகட்ட தொடங்கியாயிற்று….

இந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தல் களைகட்ட தொடங்கியாயிற்று, இன்னும் வெறும் 20 நாள் சூட்டிங் என விஷால் மேக் அப்புடன் வந்துவிட்டார்

வைகோ நடுவுல கொஞ்சம் பக்கம் காணோம் விஜய் சேதுபதி போல ஆகி, “பாஜகவா அய்யய்யோ அது மதவாத கட்சி, ஸ்டாலின் அண்ணே நல்லாஇருக்கியா அண்ணே..” என சென்று சேர்ந்துவிட்டார்

அவர் தலையில் அடிபட்டிருக்க்கின்றது என அறியாத ஸ்டாலினும் வரவேற்றிருக்கின்றார்

ஆக இப்போதைக்கு திமுக, தினகரன், மதுசூதனன், விஷால், பாஜக‌ என ஐம்முனை போட்டி நடக்கின்றது.

இது போக சீமான் கோஷ்டியும் களமிறங்கலாம் , சீமானை பற்றி ஒன்றும் சொல்வதற்கிலை, யார் பாக்கெட்டில் பணம் இருக்கின்றதோ அதை பொறுத்து அன்னாரின் நகர்வு இருக்கும், அவர் வழக்கம் போல் கட்சியினை கலைப்பேன் என்றேல்லாம் மிரட்டுவார்

அவர் கலைத்த கலைப்பெல்லாம் கடந்த தேர்தலிலே பார்த்தாயிற்று

இந்த தேர்தலில் விஜயகாந்த் என்பவர் கட்சிதான் பாவம், தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியாக இருந்த, மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அக்கட்சி களத்திலே இல்லை

ஆனால் அவரை தவறாக வழிநடத்திய மதிமுக திமுகவோடு ஓட்டிகொண்டிருக்கின்றது

கடந்த பொதுதேர்தலிலே இப்படி வழிவிட்டிருந்தால் விஜயகாந்த் கலைஞரோடு ஒட்டியிருப்பார், அதிமுக ஆட்சிக்கு வந்திருக்காது இன்னும் என்னவெல்லாமோ நடந்திருக்கும்

என்ன செய்ய, தமிழகத்தின் தலைவிதி அப்படி இருந்திருக்கின்றது

இந்த கொடுமைகளை காணமுடியாமல்தான் விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றுவிட்டாரோ என்னமோ??

இதில் சுத்த வெவஸ்தை கெட்ட கட்சி சாட்சாத் காங்கிரஸ்தான்

குஷ்புவினை மட்டும் நிறுத்தினால் அசால்ட்டாக வெற்றியினை அள்ளி கொண்டு வருவார், ஆனால் தமிழகத்தில் மறந்தும் காங்கிரஸ் வளர்ந்துவிட கூடாது என நினைக்கும் காங்கிரசார் எப்படி விடுவார்கள்?

காங்கிரசுக்கு எதிரிகள் வேறு எங்கும் அல்ல, அங்கேதான் நிறைய இருக்கின்றார்கள்

நீங்கள் வருத்தபட வேண்டாம் தலைவி, இப்படியே நீடித்தால் நீங்கள் தனிகட்சி காணுங்கள், நொடிப்பொழுதில் முதல்வராகலாம்

எல்லா கட்சியிலும் குஷ்புவிற்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள், அவரை தலைவராக மனதிற்குள் கொண்டாடுகின்றார்கள். தலைவி மட்டும் களமிறங்கிவிட்டால் எல்லா கட்சியும் காலி என்பது மட்டும் உண்மை

ஏன் இந்த விஷாலே தன் வோட்டை தலைவிக்குத்தான் செலுத்துவார்