அண்ணே நீங்க வசமா மாட்டிகிட்டீங்க….
அண்ணே நீங்க வசமா மாட்டிகிட்டீங்க, பிரபாகரன் ஒரு மாவீரன், வீரத்திற்கு எடுத்துகாட்டுண்ணு சிங்களனே சொல்லிட்டான்
யார்டா சொன்னா??
சிங்கள புத்த குருண்ணே, அப்படியே சரத் பொன்சேகாங்கிற தளபதி கூட சொல்லிருக்காரு. அந்த சரத் சும்மா இல்லண்ணே பிரபாகரன் வச்ச குண்டுல 27 தையலோட பொழைச்சவரு, அவரே பிரபாகரன பத்தி பெருசா பேசிட்டாரு, இனி நீங்க என்ன எழுதுனாலும் நடக்காது ஹிஹிஹிஹி
டேய் ஏன் சொன்னாங்க
அவர் வீரம் அப்படிண்ணே
அடேய் இந்த பிரபாகரன் சக போராளி இயக்கத்தை கொன்றதில் யாருக்கு லாபம்? யார் செய்திருக்க வேண்டும்?
சிங்களன்னே
பிரபாகரனுக்கு பின்னால போராட்டம் நடந்திருந்தா அது எவ்வளவு பெரும் கொழும்பு சிக்கல், அப்படி ஒருத்தனுமே போராட வராம செஞ்சிட்டு போனது யாரு, இதுல யாருக்கு லாபம்?
சிங்களனுக்கு
இனி யார் பிரபாகரன் படம் பிடிச்சி தூக்கினாலும் ஏய் புலின்னு சொல்லி, ஈழகுரல் எழும்பாம அடக்குறதுல யாருக்கு லாபம்?
சிங்கணனுக்கு
அமைதிபடை எங்கே போச்சி
இலங்கைக்குண்ணே
அது கூட சண்டை யார் போட்டிருக்கணும்
சாட்சாத் சிங்களண்ணே
ஆனா போட்டது யாரு
புலிகள்ணே எங்க வீரம் அப்படி
அப்போ யாரு அமைதிபடை கிட்ட இருந்து தப்பிச்சி நிம்மதியா இருந்தது
சிங்களண்ணே
ஆக சிங்களன் செய்ய வேண்டிய வேலை எல்லாம் செஞ்சி , அவன் பண்ண வேண்டிய கொலை எல்லாம் பண்ணி, அமைதிபடையினை விரட்டியது எல்லாம் யார்ட்டா?
ஹிஹிஹி பிரபாகரண்ணே
பின்ன அந்த சிங்களனுக்கு அவன் நல்லவனாதாண்டா தெரிவான்
ம்ம்,, அப்படிய்யாணே
பின்ன, அவ்வளவு நல்ல சிங்களன் எங்கே ஈழமக்களுக்கு சமஷ்டி அல்லது ஒரு தீர்வு கொடுக்கட்டும் பார்க்கலாம்
அதெல்லாம் கொடுக்கமாட்டாங்கண்ணே
அப்போ உண்மையிலே பிரபாகரன் தமிழருக்கு போராடியிருந்தா அவர்களுக்கு எதிரிதானடா? அவங்களுக்கு உதவி செஞ்சிட்டதாலதானடா இப்போ உத்தமன்னு கிளம்புறாங்க..
என்னமோண்ணே, குழப்பி விட்டுட்டீங்க. பொறுங்க ஒழுங்கா விசாரிச்சிட்டு வாரேன்