இன்று இந்திய கடற்படை தினம்
இன்று இந்திய கடற்படை தினம்
இந்திய கடற்படை எத்தனையோ வெற்றிகளை பெற்றது, குறிப்பாக 1971 வங்கபோரில் உண்மையில் ஆடியதே இந்திய கடற்படைதான். ஏன் டிசம்பர் 4ம் தேதி இந்திய கடற்படை தினம் ஆனது என்றால் விஷயமிருக்கின்றது
மகா திரில்லான விஷயம் அது
கிழக்கு பாகிஸ்தானில் கடும் மனித உரிமை மீறலில் பாகிஸ்தான் இறங்க , கற்பழிப்பும் படுகொலைகளும் எல்லை மீறி செல்ல, அகதிகள் இங்கு குவிய, இனி பொறுப்பதில்லை என இந்தியா களமிறங்கியது.
கிழக்கு பாகிஸ்தானுக்கு செல்ல பாகிஸ்தானுக்கு ஒரே வழி கடல்பாதையே மற்றபடி வேறு பாதை அன்று சாத்தியமில்லை
இதனால் கடல்படை மோதல்கள் தொடங்கின, பாகிஸ்தான் சிறிய நாடுதான் ஆனால் அமெரிக்க உதவியுடன் பலமான கடற்படையினை வைத்திருந்தது, காஜி போன்ற பலமான நீர்மூழ்கி எல்லாம் இருந்தது
போரில் வெல்ல வேண்டுமானால் பாகிஸ்தான் கடற்கடையினை முறிக்காமல் சாத்தியம் இல்லை என்பது விளங்கிற்று, அது முறிக்கபட்டால்தான் கிழக்கு பாகிஸ்தானுக்கான சப்ளை முறிக்கபடும்
இந்தியா பெரும் கடற்கரை கொண்ட நாடு, மும்பை கோவா கொச்சி என மேற்கு கடற்கரையும், சென்னை விசாகபட்டினம் கல்கத்தா , என கிழக்கு கடற்கரையிலும் அதற்கு தளங்கள் இருந்தன
உச்சமாக அந்தமான் எனும் அற்புத லொக்கேஷனும் இருந்தது
இந்திய கடற்படையின் விமானம்தாங்கி கப்பலான விக்ராந்த் மிக முக்கிய பங்காற்றியது, பாகிஸ்தானுக்கு அது மிகபெரும் சவால் ஆனது, அதனை குறிவைத்து தன் பிரமாஸ்திரமான காஜியினை ஏவியது பாகிஸ்தான்
மிக திறமையாக அதனை கையாண்ட இந்தியா விசாகபட்டினம் அருகே அதனை 100 பாகிஸ்தான் வீரர்களோடு நொறுக்கிபோட்டது
அது இதே டிசம்பர் 4ம் தேதி
பாகிஸ்தான் அல்ல, அமெரிக்காவும் அதிர்ந்தது . நிச்சயம் அது மாபெரும் ராஜதந்திர வெற்றி. மிக தந்திரமாக காஜியினை விசாகபட்டினம் பக்கம் வரவழைத்து போட்டு தாக்கியது சாதரண விஷயம் அல்ல
காரணம் விக்ராந்த் சிக்காவிட்டால் சென்னை விசாகபட்டினம் உட்பட முக்கிய நகரங்களை நொறுக்கும் திட்டத்திலே காஜி சுற்றிகொண்டிருந்தது, மிகபெரும் அழிவு கப்பல் அது. கொடுத்தது சாட்சாத் அமெரிக்கா அவர்கள் தயாரிப்பு அது
(அது எப்படி தகர்க்கபட்டது என்பதை முன்பே எழுதிவிட்டோம், படித்திருப்பீர்கள்)
காஜி கப்பல் தகர்ப்புக்கு பின் அரண்டிருந்த பாகிஸ்தானை சுதாரிக்க விடாமல் அடிக்க இந்தியா முடிவெடுத்தது, எதிரி திணறும்பொழுது அடிமேல் அடிகொடுத்து அவனை முடிக்கவேண்டும் என்பது யுத்த நீதி
அப்படி பாகிஸ்தானின் மகா முக்கிய துறைமுகமான காரச்சியினை இந்திய போர்கப்பல்கள் முற்றுகையிட்டன. ஒரு பாகிஸ்தானிய கப்பலும் வெளிவர முடியாமல் லாக் செய்யபட்டது
பாகிஸ்தானின் ராணுவம், பொருளாதாரம் என இரண்டையும் தாங்கி நிற்கும் துறைமுகம் அது, அதில் அடித்தால் பாகிஸ்தான் அலறும் என்பது தெரியாததல்ல
டிசம்பர் 4ம் தேதி இரவில் முஸ்பீர் மற்றும் கைபர் என்ற இரு பாகிஸ்தானிய கப்பல்கள் மூழ்கடிக்கபட்டன, ஏராளமான விரைவுபடகுகளும் சேதாரமாயின
பதிலுக்கு பாகிஸ்தான் இரவில் கண்மண் தெரியாமல் குண்டு வீசியது, அதில் ஒரு கப்பல் தீபிடித்து எரிந்தது, பாகிஸ்தான் மகிழ்ந்தது , பின்புதான் தெரிந்தது அது பாகிஸ்தானிய கப்பல் சுல்பிகர் என்பது
அதாவது இரவு யுத்தத்திற்கான சில தந்திரங்களை அக்கப்பல் கடைபிடிக்கபடவில்லை, அது இந்தியகப்பல் என தாக்கி அழித்திருக்கின்றது பாகிஸ்தான்
அத்தோடு பாகிஸ்தானின் முதுகெலும்பு முறிந்தது, இந்திய கடற்படைக்கு ஒரு சேதமும் இல்லை. அதற்கு மேல் போராட பாகிஸ்தானுக்கு ஒரு கப்பலும் இல்லை. பொருளாதாரமும் பாதிக்கப்ட்டதால் முடிவுக்கு வந்து கை தூக்கி சரண்டர் என்றது பாகிஸ்தான்
கிழக்கு பாகிஸ்தானுக்கான சப்ளை முடக்கபட்டு, கிட்டதட்ட 1 லட்சம் பாகிஸ்தான் வீரர்களை சிறைபிடித்து இழுத்து வந்தார் பீல்டு மார்ஷல் மானெக்ஷா
அற்புதமான வெற்றி, இந்தியா மகத்தான வெற்றிபெற்று எங்கோ உயரத்தில் நின்றது.
இப்படியாக டிசம்பர் 4ம் தேதி மிகபெரும் வெற்றியினை அன்று பெற்றது, அந்த மகத்தான நாள்தான் இந்திய கடற்படை தினமாக கொண்டாடபடுகின்றது
இங்கு ஒரு கேள்வி எழலாம், இத்தனை பெரிய வெற்றியில் காஷ்மீரை மீட்டிருக்கலாமே ஏன் மீட்கவில்லை எனும் கேள்விகள் எழலாம்
இந்தியாவிடம் அப்படி திட்டம் இருந்தது, ஆனால் பாகிஸ்தானிய கடற்படையினை நாம் போட்டு துவைத்து எடுத்தபொழுது அமெரிக்க கடற்படை பாகிஸ்தானுக்கு துணையாக கிளம்பியது
ஆனால் அது வருவதற்குள் ஒரே இரவில் நாம் வென்றுவிட்டோம், இன்னொன்று அமெரிக்க கப்பல் இந்திய படைகளை தாக்கினால் விடமாட்டோம் சோவியத் கப்பல்படை களத்தில் இறங்கியது.
பின் அவர்களுக்குள் முறுக்கிகொண்டது, அதன் பின் அமெரிக்க படைகள் விலகின, எங்கிருந்து வந்ததோ அங்கு திரும்பின
எங்கிருந்து வந்தன என்றால் இலங்கைக்கு கீழே 900 மைல் தொலைவில் இருக்கும் டியோ கார்சியாவில் இருந்துதான் வந்தன
அதன்பின் அது சர்வதேச சிக்கல் ஆனது, காஷ்மீர் பிரச்சினை தீரவே கூடாது என்பது சர்வதேச அரசியல் அதனுள் சென்றிருந்தால் அது பல்வேறு சிக்கல்களை கொண்டுவரும் என்பதால் வங்கத்தை விடுவித்ததுடன் இந்தியா தன் நடவடிக்கையினை நிறுத்தியது
இந்தியா தன் வரலாற்றில் மிகபெரிய வெற்றியினை டிசம்பர் 4ல் பெற்றதால் இந்நாள் தேசிய கடற்படை தினமாகவே கொண்டாடபடுகின்றது
நேவி எனும் வார்த்தையின் முன்னோடி வார்த்தை நாவாய் எனும் தமிழ்வார்த்தை. தமிழில் கப்பல் என்றே வார்த்தை கிடையாது, தமிழில் கப்பற்படை நாவாய் என்றே அழைக்கபட்டது
ஆங்கிலேயரிடம் கேட்டால் பைபிளில் நோவா என்றொருவன் உண்டல்லவா? வெள்ளம் வரும்பொழுது கப்பல் கட்டி தப்பித்தானே, அதனாலே நோவா பெட்டகம் நேவி ஆயிற்று என்கின்றார்கள்.
மூல பொதுவார்த்தையில் இருந்து தமிழில் நாவாய் ஆகியிருக்கலாம்,
தமிழில் நாவாய் என்கின்றோம்,
(தமிழனே ஆதியில் கப்பற்படை வைத்திருந்த இனம், நாவற்படை வைத்திருந்த இனம் என கிளம்பினால் அதுவும் அபத்தம், காரணம் ராஜேந்திர சோழனுக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்னர் வாழ்ந்த ஜூலியஸ் சீசரே கடற்படை வைத்திருந்தான்
உண்மையில் கப்பல் என்பது மலாய்மொழி வார்த்தை. ஆனால் அவர்கள் ஒருநாளும் கப்பல் என்பதே எங்கள் வார்த்தை , நாங்கள் கடலில் புகுந்த முதல் குடி என்றெல்லாம் வரலாறு பேசுவதே இல்லை, அவ்வளவு பெருந்தன்மையானவர்கள்)
பின் எப்படியோ ஆங்கிலத்தில் திரிந்து நேவி என்றானது, இது ஆங்கில மொழியில் கலந்த வார்த்தையாக இருக்கலாம், வெள்ளையன் வைத்ததே விதி என்பதால் இன்று உலகம் முழுக்க கப்பற்படையின் பெயர் நேவி என்பது
அப்படி என இந்திய கடற்படை Indian Navy Service கம்பீரமாய் வலம் வருகின்றது, இன்றைய உலகில் பலமான கடற்படை நமக்கும் உண்டு
இந்திய பாதுகாப்பிற்கு கடல் பாதுகாப்பு மகா முக்கியமானது, அப்பணியினை திறம்பட செய்து வரும் அந்த கடற்படை வீரர்களுக்கு சல்யூட்
வந்தே மாதரம்.