விஷாலுக்கு வாழ்த்து கூறிய குஷ்பு ..

விஷாலுக்கு வாழ்த்து கூறிய குஷ்பு மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் : கராத்தே தியாகராஜன்

முதலில் அடிக்கடி அதிமுக பற்றி கவலைபடும் திருநாவுக்கரசர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுதான் முதல் விஷயம்

குஷ்பு விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்தது தனிபட்ட விஷயம், அதற்கும் காங்கிரசுக்கும் என்ன தொடர்பு வந்துவிட்டது?

டெல்லியில் மன்மோகன் சிங்கும் மோடியுமே சந்திக்கின்றார்கள், மோடியும் சோனியாவும் சந்திக்கின்றார்கள்

அதெல்லாம் என்ன? அப்படியானால் மன்மோகன் சிங்கினை நீக்கிவிட முடியுமா?

தமிழக காங்கிரசின் ஒரே முகம் குஷ்பு, அவர் இல்லாவிட்டால் தமிழக காங்கிரஸின் நிலை அதோகதி

காங்கிரசால் தலைவியா இல்லை தலைவியால் காங்கிரசா என்றால் நிச்சயம் தலைவிதான் தமிழகத்தில் காங்கிரசை தாங்கி பிடிகின்றார்

இதனை நன்கு தெரிந்த எதிர்கட்சிகளின் ஸ்லீப்பர் செல்லாக இந்த தியாகராஜன் என்பவர் இருக்கின்றார் என்பது தெரிகின்றது

அநேகமாக இந்த தமிழிசையின் ஸ்லீப்பர் செல்லாக அவர் இருக்கலாம்..

தியாகராஜனுக்கு சங்கத்தின் சார்பாக கடும் கண்டனங்கள், இவரை முதலில் தமிழக காங்கிரசை விட்டு வெளியேற்ற வேண்டும் என சங்கம் கோரிக்கை வைக்கின்றது


விஷாலுக்கு தமிழகத்தில் போட்டியிட உரிமை இல்லை என கத்திகொண்டிருப்பவன் யாரென பார்த்தால் முக்கால்வாசி பயல் ஈழதமிழராய் இருக்கின்றான்

தமிழகத்தில் அவனுகளுக்கு வோட்டு கிடையாது, இங்கு உள்ளே வரவே முடியாது. ஒரு உரிமையும் இல்லை

அவர்கள்தான் எங்கோ இருந்துகொண்டு விஷால் நிற்க கூடாது என ஒப்பாரி வைக்கின்றார்களாம்