விஷாலின் வேட்புமனு நிராகரிக்கபட்டது
வேட்புமனு தாக்கல் செய்யும்பொழுது விஷாலுக்கு ஆதரவாக இருவர் முன்மொழிய வேண்டுமாம், அப்படி இருவர் மொழிந்தார்களாம்
ஆனால் வேட்புமனு ஏற்றுகொள்ளும் அதிகாரிகள் விசாரித்ததில் இருவரும் பல்டி அடித்து ஓடிவிட்டார்களாம், அந்த கையெழுத்து கூட போலி என சொல்லிவிட்டு விசால் முகத்தில் கரி பூசிவிட்டு அந்த ஸ்லீப்பர் செல்கள் பறந்துவிட்டதாம்
விஷாலும் அதிகாரிகளிடம் அவர்கள் மிரட்டபட்டிருக்கின்றார்கள் என ஆடியோ ஆதாரங்களை சமர்பித்தாராம், ஆனால் அதிகாரிகள் ஏற்றுகொள்ளவில்லையாம்
ஆடியோவில் மிரட்டியது யார்? எந்த தரப்பு என விஷால் இன்னும் சொல்லவில்லை
ஆக விஷாலின் வேட்புமனு நிராகரிக்கபட்டது
ஏம்பா விஷாலு, உன்னை நம்பி முன்மொழிய கூட இரண்டு பேர் இல்லை, வோட்டுபோட யாரப்பா வருவார்? மனு தள்ளுபடியானது நல்லது என சொல்லிவிட்டு போய்யா..
இதில் இப்போது மகிழ்ச்சியில் இருப்பது யாரென்றால், அங்கிள் சைமன் கோஷ்டி
“ஆடாமல் ஜெயிச்சமோடா” என அந்த கும்பல் ஏக அழிச்சாட்டியத்தில் இருக்கின்றது.
விஷால் இன்று முளைத்த காளான் – செல்லூர் ராஜூ
அன்னார் மவுண்பேட்டன் காலத்திலே விழுதுவிட்ட ஆலமரம் என நம்பிகொள்ளுங்கள்
இதுக்கே இப்படி கண்ணு தள்ளினா, இன்னும் உள்ளே போனா என்ன ஆயிருக்கும் ஆண்டவனே”
