ஆருத்ராவின் மனைவி கே.ராமலஷ்மி என்பவர் ஒரு பேட்டி
தெலுங்கில் மிக பிரபலமான எழுத்தாளர்கள் உண்டு, அதில் சாகித்ய அகாடமி விருதுக்குரியவருமான ஆருத்ராவின் மனைவி கே.ராமலஷ்மி என்பவர் ஒரு பேட்டி அளித்திருக்கின்றார்
அநேகமாக உடன்பிறப்புக்கள அந்த ராமலஷ்மி கொடும்பாவி எரிக்கும் அளவு கோபமூட்டும் விஷயம்தான், ஆனால் சசிகலா சரியில்லை, ஜெயா பாவம், கலைஞர் கிரேட், ஸ்டாலின் சீ சீ என்ற அளவில் பேசிவிட்டதால் உடன்பிறப்புகள் தவிக்கின்றார்கள்
என்ன சொல்லிவிட்டார் ராமலஷ்மி
ஜெயா மிக மென்மையானவராம், நற்குணம் கொண்டவராம். சோபன்பாவுவின் மனைவிக்கு துரோகம் செய்ய மனமின்றி அவரை திருமணம் செய்யாமல் போய்விட்ட தியாகியாம்
சசிகலா முகத்தை கண்டாலே இவருக்கு பிடிக்கவில்லையாம், அவர் மேல் வேறுப்பாம் அப்படி ஒரு பெண் இருக்கவே முடியாதாம்
கலைஞர் கிரேட் மனிதராம், சிலப்பதிகார தெலுங்கு பதிப்பினை இந்த அம்மா செய்யும்பொழுது ஒரு பணமும் வேண்டாம் சிலம்பு புகழ் பரவினால் போதும் என மறுத்துவிட்ட பண்பாளராம், பெரும் அறிஞராம்
இத்தோடு அந்தம்மா நிறுத்தியிருக்கலாம், அடுத்து சொன்னதுதான் அதிரடி
ஸ்டாலின் இளைஞராக இருக்கும் போது அவரது வீடு கிண்டி அருகில் இருந்தது. அங்கு அக்கம்பக்கத்து கல்லூரிப் பெண்கள் எல்லாம் அவரது பார்வையில் பட்டு விடக்கூடாது என்று முக்காடு போட்டு முகத்தை மறைத்துக் கொண்டு நடமாடுவார்கள் என கேள்விப் பட்டிருக்கிறேன்
இப்படி சொல்லிவிட்டு ஆனால் தமிழகத்தில் இப்போது மற்றவர்களை விட ஸடாலின் பரவாயில்லை எனவும் சொல்லிவிட்டார்
இவர் ஸ்டாலினை கண்டிக்கின்றாரா இல்லை தமிழக நிலை மோசமானதை சொல்கின்றாரா என்பது புரியவே இல்லை
ஆனால் ஒருவிஷயம் உண்மை
ஆச்சரியமான எழுத்தாளர், உழைப்பாளி, அறிவாளி என பலமுகம் இருந்தாலும் திமுகவில் முதலில் கலைஞர் மேல் யாருக்கும் அபிமானம் இல்லை
அண்ணாவிற்கு பின் அவர் தலைவராகும் பொழுது பலர் முகம் சுளித்தனர், இவர் எப்படி? இவரோடு எப்படி அரசியல் செய்வது என்றேல்லாம் நெளிந்தனர்
ஆனால் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அட்டகாசமாக ஆடி இன்று தன் இமேஜை நிறுத்திகொண்டவர் கலைஞர், அப்படி ஒரு காலம் இருந்தது என சொன்னாலும் இப்பொழுது நம்ப யாரும் தயாரில்லை
அந்த சவாலை வெற்றி கொண்டு காலத்தின் பக்கங்களை அழித்துவிட்டவர் கலைஞர்
ஸ்டாலின் எப்படி என்பதை இனி காலம்தான் சொல்லும்
அது இருக்கட்டும், இந்த ராமலஷ்மி கழக உடன்பிறப்புகளிடம் இனி வாங்கி கட்ட போவது நிச்சயம்.